என் மலர்
திருப்பத்தூர்
- வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள கதவாலம் ஊராட்சி சேர்ந்த அப்துல் சலீம் (வயது 45) கூலி தொழிலாளி.
இவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷப் பாம்பு கடித்தது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த அவர் அதிகாலை இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் மற்றும் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் பகுதியில் கள்ள சாராயம் மற்றும் வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த தென்னரசு (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
இதனையடுத்து தென்னரசு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- 195 பேருக்கு 5 கட்டங்களாக இந்த பயிற்சி நடந்தது
- நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்துவது அவசியம்
திருப்பத்தூர்:
கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்குட் பட்ட பொதுமக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மினிடேங் போன்றவற்றின் மூலமாகவும், ஜல்ஜீவன் திட்டத் தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமை வட் டார வளர்ச்சி அலுவலர் நா.விநாயகம் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் திருமால், பயிற்சியின் அவசியம், நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்துவ தன் அவசியம் பற்றியும் பேசினார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகராசி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தேசிங்குராஜா, உதவி பொறியாளர் கலைப்பி ரியா, மஞ்சுநாதன், ராஜா ஆகியோர், பம்ப் ஆபரேட்டர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வார்டு உறுப்பினர் ஆகியோ ருக்கு பயிற்சி அளித்து கையேடு வழங்கினர். முடிவில்வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு நன்றி கூறினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராமக் குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5 பேர் வீதம் 39 ஊராட்சிகளுக்கு 195 பேருக்கு 5 கட்டங்களாக இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
- வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்தல்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யத்திலிருந்து, காட்பாடி, ஆம் பூர். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் மல் லானூர் வரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவுதுணைபோ லீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக் டர் வனிதா, சப்-இன்ஸ்பெக் டர் முத்தீஸ்வரன், செந்தில் உள்ளிட்ட போலீசார் நேற்று ரெயில்களிலும், ரெயில் நிலை யங்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடு பட்டனர்.
அப்போது ஜோலார்பேட் டையை அடுத்த பச்சூர் ரெயில்நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்துவதற்காக 15 மூட்டை களில் பதுக்கிவைத்திருந்த 750 கிலோரேஷன் அரிசியை பறி முதல் செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி சென்ற அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி டேக்கன் வட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சின்ன பாப்பா (வயது 70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை அதிகமான வயிற்று வலி காரணமாக வீட் டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந் துள்ளார்.
இதை பார்த்த அவரது குடும்பத்தினர், சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் குணசேகர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
- மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
- ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்
திருப்பத்தூர்:
தமிழக அரசு 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேடால் எலி மருந்து விற்பனையை தடை செய்துள்ளது.
இதுகுறித்துமாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;
வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 'ரேடால்' எலிமருந்தானது மாளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்,மருந்து கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே 'ரேடால்' மருந்து விற்க கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
'ரேடால்' மருந்து விற்பனை செய்வதுதெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்டுள்ள 'ரேடால்' எலி மருந்தை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
இது குறித்து திருப்பத்தூர் - 95009 -01367, கந்திலி 63820-09282, ஜோலார்பேட்டை 99941-27177, நாட்றாம்பள்ளி 86678-85729, ஆலங்காயம் 93617-91499, மாதனூர் 94899-23724 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மேடை அமைக்கும் பணி ஆய்வு
- உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் வருகிறார்.
கொடியேற்றுதல், அரசு கட்டிடங்கள் திறந்து வைத்தல், பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனால் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலவாடி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கப்படவுள்ளது.
இந்த இடத்தினை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கு விழா மேடை அமைக்கும் பகுதி மற்றும் பொதுமக்கள் அமரும் இருக்கைகள், வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளிட்டவைகள் குறித்து கலந்தாய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர்கள் சிவப்பிரகாசம், குமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம. அன்பழகன், மதிய ஒன்றிய செயலாளர் க. உமாகன்ரங்கம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்
- 3 பவுன் செயினை போலீசார் பறிமுதல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அன்பரசன். அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளமதி(வயது 33). இவர், தருமபுரியில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் கணவன் மனைவி இருவரும் பைக்கில் திருப்பத்தூரில் இருந்து தென்றல் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இளமதி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து இளமதி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (25) மற்றும் கணபதி(38) ஆகியோர் இளமதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். மேலும் வாலிபர்களிடமிருந்து மூன்றரை பவுன் செயினை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7 வாகனங்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் எச்சரிக்கை
- ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகரில் அனுமதி இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படு வதாகவும். ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு நடத்தி, விதிகளை பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் காளியப்பன் மேற்பார்வையில், திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குழுவினர் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக அளவு ஆட்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களையும், அனுமதி, உரிமம் மற்றும் பர்மிட் இல்லாமல் இயங்கி வந்த 4 சரக்கு வாகனங்கள் என மொத்தம் 7 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூரில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும்நடவடிக்கை எடுப்பதுடன், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- பொதுமக்கள் அவதி
- நாளொன்றுக்கு 10 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் மற்றும் சந்தைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு, பெங்களூரு மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்து காய்கறிகள் பழங்கள் திருப்பத்தூருக்கு விற்பனைக்கு அனுப்பப்ப டுகின்றன. இங்கு மொத்த விலையிலும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்ப டுகிறது.
எனினும், தற்போது சென்னைக்கு 30 சதவிகிதம் தக்காளி வரத்து குறைந்துள்ளதாலும், கர்நாடகா மற்றும் ஆந்திர, கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து திருப்பத்தூருக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது இதனால் கூடுதல் விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 10 டன் தக்காளி மட்டுமே இறக்குமதி செய்யப்ப டுகிறது.
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் மட்டும் இதர பகுதிகளில் மொத்த விலையில், ஒரு கிலோ தக்காளி 100, முதல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவு தக்காளி திருப்பத்தூருக்கு வருகிறது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் தக்காளி பயிரிடாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தடுப்பு சுவரில் மோதியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பைனபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40) மர வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று பருகூர் பகுதியிலிருந்து தனது பைக்கில் ரவி பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் பைனப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வரும்போது பைக் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைகிறது
- ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து அகற்றினர்.
ரெயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் திருப்பத்தூர் - நாட்டறம்பள்ளி செல்ல தற்காலிக மாற்றுவழி அமைப்பது குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அருணா, மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை உட்பட வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பலர் உடன் இருந்தனர்.






