என் மலர்
திருப்பத்தூர்
- குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை அவரது மனைவி, தந்தை ஆகியோர் கொலை செய்தனர்.
- சசிகுமார் மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (40). தம்பதியினருக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
சசிகுமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று சசிகுமார் மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது மாமனார் சுப்பிரமணி (70) உதவியுடன், சசிகுமாரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
இது குறித்த தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி மற்றும் சுப்பிர மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நடவடிக்கை எடுப்பதாக உறுதி
- அண்ணன் வாங்கிய நகையை வாங்கி தர வலியுறுத்தல்
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ராதிகா (வயது 45). இவரது அண்ணன் சந்திரசேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது 30 பவுன் நகையை அண்ணன் சந்திரசேகரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
வாங்கிய நகையை நீண்ட நாட்களாக சந்திர சேகர் திருப்பித்தர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதிகா உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ராதிகா தனது உடலில் பெட்ரோலை ஊற் றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, ராதிகா மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ராதிகாவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- முன்னாள் அமைச்சர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
- உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி
திருப்பத்தூர்:
வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில், அவரது தனி உதவியாளர் பிரகா சம்மற்றும் விக்னேஷ், ராஜ்குமார், கவிதா பிரகாசம் ஆகியோர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி திருப்பத்தூரை அடுத்த ஓமக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி தேவன் என்பவரிடம் ரூ.16 லட்சம் பெற்றுள்ளனர்.
ஆனால் அரசு வேலை வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜானிடம், தேவன் மற்றும் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற் றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- செடிகளை போலீசார் பிடிங்கி அழித்தனர்
- ஜெயிலில் அடைத்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகேநாச் சியார் குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயியைபோலீசார் கைது செய்தனர்
கஞ்சா செடி வளர்ப்பு
திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 62) விவசாயி. இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு வருகிறார். இந்த வாழைத் தோப்பு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வந் தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாகராஜனின் வாழைத் தோப்பிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாழை தோப் பின் நடுவில் ராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந் தது. உடனடியாக கஞ்சா செடிகளை பிடிங்கி போலீசார் அழித்த னர். இதன் எடை 2½ கிலோ ஆகும்.
இதையடுத்து போலீசார் ராமனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். வாழைத்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
குடியாத்தம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை ஹாசாபி நகரை சேர்ந்தவர் ஆசிப் (வயது 28) பேக்கரி உரிமையாளர்.
இவருக்கும், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு ஆசிப் குடியாத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பேக்கரி கடை நடத்தி வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் இருந்த 17 வயது சிறுமிக்கு யாரும் இல்லாத சமயத்தில், ரோஸ்மில்கில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார் சிறுமி மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.
நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிப்பை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.
- அமுலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்
குடியாத்தம்:
குடியாத்தத்தில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலுவிஜயன் வழங்கினார்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், கோபாலபுரம் மற்றும் சுண்ணாம்புப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றின் ஏரிக்கரையில் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்.
வீடுகளை இழந்த பொதுமக்கள் தங்கும் வசதி இன்றி கடும் அவதி அடைந்தனர். எனவே ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வீடுகளை இழந்த 252 பேருக்கும், 2-ம் கட்டமாக 57 பேருக்கும் ராமாலை ஊராட்சியில் வழங்கினார்.
இதனை தொடர்ந்து தற்போது 3-ம் கட்டமாக பங்கரிஷிகுப்பம் பகுதியில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டது. இதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
தாசில்தார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். துணைதாசில்தார் சுபிச்சந்தர் அனைவரையும் வரவேற்றார்.
குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பா ளராக குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கலந்துகொண்டு 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார். முடிவில் வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர் நன்றி கூறினார்.
- பத்திரம், சான்றிதழ்கள் எரிப்பு
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு ஊராட்சி கண்ட கள்ளவூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), லாரி கிளீனர்.
இவரது மனைவி நாச்சி (35). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராம சாமி, அவரது மகன் முருகன் (40) என்பவருக்கும் வரப்பு தகராறு ஏற்பட்டதில் ராம சாமி காயமடைந்து திருப்பத் தூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகி றார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாளை போலீ சார் தாலுகா போலீஸ் நிலை யத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி பெருமாள் மற்றும் அவரது மனைவி நாச்சி கடந்த 30-ந்தேதி வீட்டை பூட் டிக்கொண்டு திருப்பத்தூர் வந்துள்ளனர்.
பின்னர் அங்கு அவரது உறவினர் பெருமாள் என்பவர் விட்டில் தங்கி விட்டு, போலீசாக தேர்வு பெற்று வேலூரில் பயிற்சியில் உள்ள மகளை பார்க்க நேற்று வேலூர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக பெருமாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த வீடு மற்றும் நில பத்திரங்கள், மகள், மகன் பள்ளி சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருந்தது.
மேலும் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து திருப் பத்தூர் தாலுகா போலீசில் பெருமாள் உறவினர்கள் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோ தம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு யாராவது செய்தார்களா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் உமராபாத் ஊராட்சி பஸ் நிலையத்தில் ரியாஸ் (வயது 45) என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உமராபாத் போலீசார் கடையில் சோதனை செய்தபோது ஹான்ஸ், குட்கா பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பார்சனா பள்ளி பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 30). இவர் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் கோட்ட பொறு ப்பாளர் தீனதயாளன், ரவி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் இல.குருசேவ், நந்தனம் பொறியியல் கல்லூரி தாளாளர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நந்திபெண்டா நந்திராயன் கோவில் சிலைகள் சேதமடைந்துள்ளது.
அதனை சீர் செய்ய வேண்டும். ராஜராஜ சோழன் பிறந்த நாளை அரசே கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள கோவில் குளம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் இந்து முன்னணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த, குடியானகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான நிலத்தில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.
அந்த வீட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அனுமந்தனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனுமந்தன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
- கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி முன்னிலை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
வாணியம்பாடி பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜோலார்பேட்டை பகுதியில் புதிய பயணிகள் நிழற்கூடம் திறந்து வைத்தல், திருப்பத்தூரில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது.
இதில் அனைவரும் உற்சாகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.சம்பத்குமார், டி.கே.மோகன், சாந்திசீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன், ம. அன்பழகன், எஸ். சாரதி குமார், ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், கவிதா தண்டபாணி, க. உமா கன்ரங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






