search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempt to set the girl on fire"

    • நடவடிக்கை எடுப்பதாக உறுதி
    • அண்ணன் வாங்கிய நகையை வாங்கி தர வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ராதிகா (வயது 45). இவரது அண்ணன் சந்திரசேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது 30 பவுன் நகையை அண்ணன் சந்திரசேகரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    வாங்கிய நகையை நீண்ட நாட்களாக சந்திர சேகர் திருப்பித்தர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதிகா உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ராதிகா தனது உடலில் பெட்ரோலை ஊற் றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, ராதிகா மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ராதிகாவிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×