என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச வீட்டுமனை பட்டா"

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 423 மனுக்கள் வரப்பெற்றன.கடந்த 31.10.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கலெக்டரிடம் அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்.

    இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அரூர் வருவாய் வட்டாட்சியரிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தர விட்டார்.

    மாவட்ட கலெக்டர் உத்தர வின்படி, இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தகுதியுள்ள 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை வழங்கிய 15 நாட்களுக்கு ள்ளாகவே, இக்குறுகிய காலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

    மேலும், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், தருமபுரி மாவட்ட வருவாய் அலகு, காரிமங்கலம் வட்டம், பன்னிகுளம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த காளியப்பன் என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மகன் அரிதாஸ் என்பவருக்கு தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தின் பதிவுறு எழுத்தர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணையினையும் வழங்கினார்.

    • அமுலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலுவிஜயன் வழங்கினார்

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், கோபாலபுரம் மற்றும் சுண்ணாம்புப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றின் ஏரிக்கரையில் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்.

    வீடுகளை இழந்த பொதுமக்கள் தங்கும் வசதி இன்றி கடும் அவதி அடைந்தனர். எனவே ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வீடுகளை இழந்த 252 பேருக்கும், 2-ம் கட்டமாக 57 பேருக்கும் ராமாலை ஊராட்சியில் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து தற்போது 3-ம் கட்டமாக பங்கரிஷிகுப்பம் பகுதியில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டது. இதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

    தாசில்தார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். துணைதாசில்தார் சுபிச்சந்தர் அனைவரையும் வரவேற்றார்.

    குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பா ளராக குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கலந்துகொண்டு 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார். முடிவில் வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர் நன்றி கூறினார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணாநகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்திருந்தனர்.

    ஆனால் பல ஆண்டுகளாகியும் பட்டா வழங்காததால் அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் தொப்பம்பாளையம், கணபதி நகர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க பொருட்களுடன் நேற்று திரண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து பவானிசாகர் போலீசார் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் சமாதானம் அடையாமல் தங்களுக்கு பிடித்த இடத்தை பிடித்து குச்சிகளை நடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி சரவணன், சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் கூறும்போது, வருமானத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.

    சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று எப்போது கேட்டாலும் இடம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்று கூறி அனுப்பிவிடுகின்றனர். உடனடியாக எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

    விண்ணப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட குரும்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் நிலத்தை அளவீடு செய்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளிக்கவே பொதுமக்கள் அதனை ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
    பெரம்பலூர்:

    குன்னம் தாலுகா தேனூரை சேர்ந்த மணிவேல் என்பவர் கொடுத்த மனுவில், தேனூர் பகுதியில் சிலர் மீண்டும் சாராயம் மற்றும் சட்ட விரோதமாக மது பானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    பெரம்பலூர் பெரியவெண்மணியை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுக்களில், கிராம சபை கூட்டம் நடத்தும் அதிகாரிகளுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், மற்றொரு மனுவில் குன்னம் தாலுகா கொத்தவாசல் கிராமத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையீட்டு குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் இளங்கோவன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் வந்து கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் பணி செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியகுழு தமிழ்நாட்டில் பரிந்துரை செய்த திருந்திய ஊதிய நிர்ணயத்திற்கான நிலுவை தொகையினை 1-10-2017 அன்று முதல் வழங்கிடவும் உத்தரவிட்டது.

    ஆனால் பெரம்பலூர் ஒன்றியத்தில் மட்டும் தான் அந்த நிலுவை தொகை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் பணி செய்பவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நிலுவை தொகை வழங்கப்படாத ஒன்றியங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவை தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி ஊராட்சிக்கு உட்பட்ட எசனை காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 40 வருடங்களாக குடியிருக்கிறோம் என்றும், ஆனால் இது வரை எங்கள் வீட்டு மனைக்கு அரசு பட்டா வழங்கவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதே போல் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி வடக்கு தெருவில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். எங்களால் வாடகை பணம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    பூலாம்பாடி மாதவி தெருவை சேர்ந்தவர் சுதந்திரகுமார் கொடுத்த மனுவில், மானியத்துடன் விவசாய டிராக்டர் வழங்குவதாக ஏஜென்சி கூறியதால் கடனாக தனியார் நிதி நிறுவனம் மூலம் டிராக்டரை பெற்று கொண்டேன். ஆனால் அந்த நிதி நிறுவனம் எனது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எனக்கு தெரியாமல் காசோலை மூலம் லட்சக்கணக்கில் பணம் எடுத்து மோசடி செய்தது. நானும் சரியாக தவணை தொகையினை செலுத்தினேன். மேலும் பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தில் உத்தரவை பெற்று எனது விவசாய டிராக்டரை அந்த நிதி நிறுவனம் ஜப்தி செய்தது. விவசாய டிராக்டர் கடன் தவணை 4 ஆண்டுகள் இருக்கும்போதே டிராக்டரை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் சாதிய படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பொதுமக்களிடம் இருந்து மேற்கண்ட மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
    ×