search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The girl was raped"

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    சேத்துப்பட்டு தாலுகா அருந்ததிபாளையம் பகு தியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் கடந்த 2015- ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பே ரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்ப திவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர் பான வழக்கு விசாரணை நேற்று திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது.

    இந்த நிலை யில் நேற்று இவ்வழக்கு மீண் டும் கோர்ட்டில் விசார ணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித் தார்.

    நேற்று அவர் தனது தீர்ப் பில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபாகர னுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறு மிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    குடியாத்தம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை ஹாசாபி நகரை சேர்ந்தவர் ஆசிப் (வயது 28) பேக்கரி உரிமையாளர்.

    இவருக்கும், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு ஆசிப் குடியாத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பேக்கரி கடை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் இருந்த 17 வயது சிறுமிக்கு யாரும் இல்லாத சமயத்தில், ரோஸ்மில்கில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார் சிறுமி மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

    நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிப்பை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    ×