search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
    X

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    சேத்துப்பட்டு தாலுகா அருந்ததிபாளையம் பகு தியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் கடந்த 2015- ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பே ரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்ப திவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர் பான வழக்கு விசாரணை நேற்று திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது.

    இந்த நிலை யில் நேற்று இவ்வழக்கு மீண் டும் கோர்ட்டில் விசார ணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித் தார்.

    நேற்று அவர் தனது தீர்ப் பில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபாகர னுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறு மிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×