search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug sales"

    • போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

    உடுமலை:

    உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு தனிப்படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி, தலைமை காவலர் கோவிந்தராஜு ஆகியோர் தலைமையில் போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தளி பேரூராட்சி பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வகுமார் (வயது 43) என்பவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மொத்தம் 45.7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் உமராபாத் ஊராட்சி பஸ் நிலையத்தில் ரியாஸ் (வயது 45) என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் உமராபாத் போலீசார் கடையில் சோதனை செய்தபோது ஹான்ஸ், குட்கா பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியம்மன் கோவில் பின், பெரிய கானூர் செல்லும் வழிகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலேயே சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
    • வாகன டிரைவர்கள் சிலர், போதை வஸ்துக்களை உட்கொண்டு வாகனத்தை இயக்கும்போது விபத்து ஏற்படுகிறது.

    அவிநாசி:

    கருவலுார் ஊராட்சி கிராமங்களில் போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் உள்ளதாக சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பொதுவெளிகளில் அதிகமாக கஞ்சா, குட்கா, ஹான்ஸ் ஆகியவை அதிகளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.இதனால் கருவலூரில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அசம்பாவிதங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மாரியம்மன் கோவில் பின், பெரிய கானூர் செல்லும் வழிகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலேயே சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதுகாப்பின்றியும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வாகன டிரைவர்கள் சிலர், போதை வஸ்துக்களை உட்கொண்டு வாகனத்தை இயக்கும்போது விபத்து ஏற்படுகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் உரிய கவனம் காட்டுவதில்லை. எனவே போதை பொருள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

    • போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை
    • சிகரெட்கள் பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் சரக டிஐஜி பொறுப்பு சத்யபிரியா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என அதிரடி சோதனை நடைபெற்றது.

    குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீசார் குடியாத்தம் பலமநேர் ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி, காந்தி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது பள்ளிக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்த சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×