search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே போதை பொருள் விற்பனை செய்த டிரைவர் கைது
    X

    கோப்புபடம்.

    உடுமலை அருகே போதை பொருள் விற்பனை செய்த டிரைவர் கைது

    • போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

    உடுமலை:

    உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு தனிப்படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி, தலைமை காவலர் கோவிந்தராஜு ஆகியோர் தலைமையில் போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தளி பேரூராட்சி பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வகுமார் (வயது 43) என்பவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மொத்தம் 45.7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×