search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் பள்ளி அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை
    X

    குடியாத்தம் பள்ளி அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை

    • போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை
    • சிகரெட்கள் பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் சரக டிஐஜி பொறுப்பு சத்யபிரியா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என அதிரடி சோதனை நடைபெற்றது.

    குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீசார் குடியாத்தம் பலமநேர் ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி, காந்தி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது பள்ளிக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்த சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×