என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம், மது விற்றவர் கைது
- ரோந்து பணியில் சிக்கினர்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் மற்றும் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் பகுதியில் கள்ள சாராயம் மற்றும் வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த தென்னரசு (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
இதனையடுத்து தென்னரசு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Next Story






