search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    • வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்தல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யத்திலிருந்து, காட்பாடி, ஆம் பூர். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் மல் லானூர் வரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவுதுணைபோ லீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக் டர் வனிதா, சப்-இன்ஸ்பெக் டர் முத்தீஸ்வரன், செந்தில் உள்ளிட்ட போலீசார் நேற்று ரெயில்களிலும், ரெயில் நிலை யங்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது ஜோலார்பேட் டையை அடுத்த பச்சூர் ரெயில்நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்துவதற்காக 15 மூட்டை களில் பதுக்கிவைத்திருந்த 750 கிலோரேஷன் அரிசியை பறி முதல் செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி சென்ற அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×