என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி துணிகரம்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவரது மகள் நபிஷா குல்சும் (வயது 23) கடந்த ஏப்ரல் 28-ந் தேதி இவரது செல்போனுக்கு, பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே தினசரி பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவலுடன் ஒரு குறுந்தகவல் வந்தது.

    இதை உண்மை என நம்பிய நபிஷா குல்சும் அந்த 'குறுந்தகவலில்' தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார்.

    அதன்பின் அவரது செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் லிங்குகளை அனுப்பி அந்த ஓட்டல்களின் தரம் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, தர மதிப்பெண் கொடுத்தால் ரூ.100 முதல் ரூ.190 வரை தினசரி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, நபிஷா குல்சும் ஸ்டார் மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். அதில், அவருக்கு ரூ.100 தொடங்கி ரூ.10 ஆயிரம் வரை பணம் வந்தது. இதனால், அவர் மகிழ்ச்சியடைந்தார்.

    குறுந்தகவல் அனுப்பி மோசடி

    இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் ஒரு குறுந்தகவலை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்குக்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக மோசடி நபர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நபிஷா குல்சும் அடுத்தடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார்.

    ஆனால், கூடுதல் பணம் வரவில்லை. இதையடுத்து, நபிஷா குல்சும் அந்த நபர்களுக்கு மெசேஜ் மூலம் பதில் கேட்டுள்ளார். அதற்கு, அவர்கள் இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

    சைபர் கிரைம் போலீசில் புகார்

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபிஷா குல்சும் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து `ஆன்லைன்' மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் மின்னூர் ரெயில்வே கேட் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத 25 வயது வாலிபர் பெங்களூர் சென்னை மார்க்கமாக செல்லும் ெரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ெரயிலில் இருந்து விழுந்திருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இவர் யார்? எந்த ஊர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டுபிடித்து தருமாறு மனைவி கலெக்டரிடம் மனு
    • ஆம்பூரில் இருந்து பணிக்குச் சென்றார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் அசாம் மாநிலத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவருடைய மனைவி கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்விரோத கரணத்தால் விபரீதம்
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஆசனம்பட்டு ரோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சங்கர் வயது (32) ஆட்டோ டிரைவர்.

    இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆதீல் அஹமது (33) ஷூ கம்பனி தொழிலாளி என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்று இரவு சங்கரை வழி மடக்்கி ஆதீல்அஹமது சரமாரியாக தாக்கியதில் சங்கருக்கு மண்டை உடைந்து அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆதீல் அஹமதுவை ஆம்பூர் டவுன் போலீசார் கைது ஜெயிலில் அடைத்தனர்.

    • சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்
    • ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கடந்த 1980 முதல் 1989 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரெயில்வே இருபாலர் தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    34 வருடங்களுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட நபர்கள் அனைவரும் சந்தித்து தங்கள் சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்.

    ஒவ்வொரு வருடமும் அனைவரும் சந்தித்து அனைவரின் சந்தோஷ- துக்கங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தனர். இதனை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    விளையாட்டுகளை விளையாடி மலரும் நினைவுகளால் சந்தோஷத்தை கழித்து விடைபெற்றுச் சென்றனர்.

    • உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த வெப்பாளமரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 52). கட்டிட மேஸ்திரி.

    இவருக்கு கடந்த 2 வருடங்க ளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் திடீரென பூச்சி மருந்தை (விஷம் )குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை கண்ட குடும்பத்தினர் மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வநாதன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • ஏலகிரி மலையில் பலத்த மழை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகள் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையின் காரணமாக ஏலகிரி மலையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்தத திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பாறைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • தீயணைப்பு துறையினருக்கு தகவல்
    • திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மண்டல நாயனகுண்டா பகுதியில் வசித்து வரும் குணவதி என்பவரின் வீட்டின் அருகே நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது.

    தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்தனர்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே நாயனசெருவு பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் வீட்டின் அருகே 5 அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பு இருப்பதாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்
    • போலீசார் கைது செய்து விசாரணை

    ஆலங்காயம்,

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவரிடம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(28) என்பவர் தனது பைக்கை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் பணம் வாங்கினார். சாந்தகுமார் நீண்ட நாட்கள் ஆகியும் பைக்கை திரும்ப மீட்கவில்லை.

    இந்த நிலையில் சசிகுமார் நியு டவுன் பகுதியில் உள்ள சாந்தகுமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

    அப்போது 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த சாந்தகுமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, சசிகுமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    வலி தாங்க முடியாமல் சசிகுமார் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணி யம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து சசிகுமார் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர்.

    • சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்
    • பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அடுத்த வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது.

    2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்த போதும், கொடி மரத்தில் ஏற்றப்பட்ட விளக்கு அணையவில்லை.

    மேலும் விளக்கில் மழைநீர் நிரம்பி எண்ணெய்யுடன் கலந்து தொடர்ந்து விளக்கு அணையாமல் எரிவதை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மேலும் அந்த கிராம மக்கள் சாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்.

    • கடைக்காரர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்
    • ஆற்றங்கரையில் கொண்டு விடப்பட்டது

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி கச்சேரி சாலையில் சக்தி (வயது 30), என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்டு அதிச்சடைந்த சக்தி கூச்சலிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்.

    இதனைப் பார்த்த பக்கத்துக் கடைக்காரர்கள், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாம்பு பிடிக்கும் நபர் விரைந்து சென்று, கடைக்குள் பதுங்கியிருந்த மஞ்சள் நிற சாரை பாம்பை பிடித்து ஆற்றங்கரையில் கொண்டு சென்று விட்டார்.

    • நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சின்னகுலமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 43). எலக்ட்ரீசியன். இவருக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ந் தேதி மாதவன் வேலை தொடர்பாக மோட் டார்சைக்கிளில் திருப்பத்தூ ரில் இருந்து திருவண்ணா மலை செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வெங்கடேஸ் வரா நகர் அருகே சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதையடுத்து மாதவன் நாய் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது மோட்டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து, அவர் சாலையில் விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    ×