கட்டிட தொழிலாளி தற்கொலை

உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி போலீசார் விசாரணை
கட்டிட தொழிலாளி தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த வெப்பாளமரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 52). கட்டிட மேஸ்திரி.

இவருக்கு கடந்த 2 வருடங்க ளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் திடீரென பூச்சி மருந்தை (விஷம் )குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்ட குடும்பத்தினர் மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வநாதன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com