search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்
    • ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கடந்த 1980 முதல் 1989 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரெயில்வே இருபாலர் தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    34 வருடங்களுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட நபர்கள் அனைவரும் சந்தித்து தங்கள் சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்.

    ஒவ்வொரு வருடமும் அனைவரும் சந்தித்து அனைவரின் சந்தோஷ- துக்கங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தனர். இதனை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    விளையாட்டுகளை விளையாடி மலரும் நினைவுகளால் சந்தோஷத்தை கழித்து விடைபெற்றுச் சென்றனர்.

    Next Story
    ×