என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Students meet"
- சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்
- ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கடந்த 1980 முதல் 1989 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரெயில்வே இருபாலர் தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
34 வருடங்களுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட நபர்கள் அனைவரும் சந்தித்து தங்கள் சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் அனைவரும் சந்தித்து அனைவரின் சந்தோஷ- துக்கங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தனர். இதனை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
விளையாட்டுகளை விளையாடி மலரும் நினைவுகளால் சந்தோஷத்தை கழித்து விடைபெற்றுச் சென்றனர்.
- பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
- ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 'மலரும் நினைவுகள் நண்பர்கள்' என்ற தலைப்பில் சிப்காட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வி.ஆர்.கல்யாணசுந்தரம், தீனதயாளன், அக்பர், பழனி, கல்யாணி, பிரகாசம், உஷா, ஷீபா ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசினர்.
பின்னர் முன்னாள் மாணவ அனைவரும் தங்களின் ஆசிரியர்களின் கால்களை விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்.
- 973-75ம் ஆண்டு பயிற்சி பெற்றவர்கள்
- வாருங்கள், சந்திப்போம் என்ற பெயரில் நிகழ்ச்சி
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆற்காட்டில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கடந்த 1973-75ம்ஆண்டு பயிற்சி பெற்றவர்கள் வாருங்கள், சந்திப்போம் என்ற பெயரில் நிகழ்ச்சி சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் (ஓய்வு) குணசேகரன் தலைமை தாங்கினார்.
காமக்கூர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். பெரணமல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) வையாபுரி வரவேற்று பேசினார்.
இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, தற்போது பணியிலிருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தற்பொழுது குடும்ப நிலவரம் உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து பலரும் நினைவுகளை பேசினர்.
முடிவில் படவேடு பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு நன்றி கூறினார்.
- 20 ஆண்டுக்கு முன்பு படித்தவர்கள்
- மரக்கன்றுகளை நட்டு வைத்து நினைவு பரிசுகளை வழங்கினர்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் (1998-2003) வரை படித்த முன்னாள் மாணவிகள் 20 வருடம் கழித்து நேற்று சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மாணவி தேவி தலைமை வகித்தார், பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் ஆசிரியைகள் கீதா, கே.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவிகள் உமா, ரம்யா ஆகியோர் வரவேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துசாமி கலந்துகொண்டு முன்னாள் மாணவிகளை கவுரவப்படுத்தி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
அனைவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்து நினைவு பரிசுகளை வழங்கினர். இதில் முன்னாள் மாணவி வனிதா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்