என் மலர்
திருப்பத்தூர்
- 3 மாதங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும்
- அதிகாரிகள் எச்சரிக்கை
ஆலங்காயம்:
வாணியம்பாடியில் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரி கள் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கச்சேரி சாலை மற்றும் உதயேந்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை என 2 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக நிலத்திலும், பாலாற்றிலும் வெளியேற்றியது கண்டறியப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலையை மூட மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் கோபாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொ ண்டார்.
மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளுக்கு தற்போது உதயேந்திரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ள நிலத்தில் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியதற்காக ரூ.1 லட்சமும் கச்சேரி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கழிவுநீர் கால்வாயில் கழிவு நீரை வெளியேற்றியதற்காக ரூ. 80 ஆயிரமும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 34 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்ற ப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதியளித்தார்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆ.செல்வ ராஜ், ஏ.மரியஜோசப், ஜி.சரவணன், எம்.பரிமளா, ஆர். மகேஸ்வரி, எம்.கீதா, பி.முனியம்மாள் பி.சந்தியா, ஆர்.ரஜினி, வி.ஆர். சரவணன், ஏ.ரமேஷ், கே.லில்லி, எம். சுகன்யா, ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா,பி.சந்தியா உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
- 150 கர்ப்பிணி தாய்மார்கள் பயனடைந்தனர்
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.ஏ.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் தீபா, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய மாவட்ட மருத்துவர் அணி தலைவர் ரவி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் மலர்மன்னன், மாவட்டம் மருத்துவர் அணி துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 25 கிலோ சிக்கியது
- ரூ.1900 அபராதம் விதித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவின் படி ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி தலைமையில் ஜோலார்பேட்டை நகராட்சி பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் யாராவது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புது ஓட்டல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சுமார் 25 கிலோ இருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.1900 அபராதம் விதித்தனர்.
மீண்டும் பிளாஸ்டிக் விற்பனை செய்தது தெரியவந்ததால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிள் எச்சரிக்கை விடுத்தனர்.
- 250 கிலோ சிக்கியது
- ரூ.10 ஆயிரம் அபராதம்
ஆலங்காயம்:
வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில் உதவி பொறியாளர் கேசவன் ஆகியோர் இணைந்து வாணியம்பாடி பஸ் நிலையம், சி.எல். சாலை, காதர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சிஎல் சாலையில் உள்ள சையது பிளாஸ்டிக் ஏஜென்சி மற்றும் அங்குள்ள செல்வராஜ் என்பவரின் பழக்கடைகளில் சோதனையிட்டனர்.
2 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ நெகிழி பிளாஸ்டிக் பைகள், தேனீர் கப்புகள் ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்தாதவாறு அங்கேயே கிழித்தனர். மேலும் ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் ரூபாயும், மற்றொரு பழகடைக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து நெகிழி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஆய்வின் போது நகராட்சி களப்பணி உதவியாளர் சரவணன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அருள், அலெக்ஸ், பெருமாள், கஜேந்திரன், சவுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ரூ.10 லட்சத்தில் அமைகிறது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு குடியான குப்பம் ரெயில்வே கேட்டை கடக்கும் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக வார்டு கவுன்சிலர் ஜி. சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க. தேவராஜி அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் நடவடிக்கையாக ஜோலார்பேட்டை நகர மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர் தலைமையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்வே கேட்டை கடந்துள்ள பொதுமக்களுக்கு நிரந்தரமாக காவிரி கூட்டு குடிநீர் வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது.
குடிநீர் வசதி ஏற்படுத்த குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இதில் நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது நகர செயலாளர் அன்பழகன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் சங்கர், வார்டு கவுன்சிலர் ஜி. சக்கரவர்த்தி, பணி மேற்பார்வையாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராறில் காதல் மனைவி பிரிந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பி கஸ்பாவை சேர்ந்தவர் சத்யா (வயது 25). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் உடன் வேலை செய்யும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக சத்யாவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.
இதனால் அவர் மன உளைச்சலில் காணப்பட்டார். சத்யாவின் பெற்றோர் மகனுக்கு 2-வது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சத்யா திருமணத்திற்கு மறுத்து வந்தார். பின்னர் திடீரென நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த மேலூரை சேர்ந்தவர் சாமந்தி (வயது 19). இவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். சாமந்தி உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
சாமந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று விஷம் குடித்து சாமந்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக சாமந்தி இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி துணிகரம்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவரது மகள் நபிஷா குல்சும் (வயது 23) கடந்த ஏப்ரல் 28-ந் தேதி இவரது செல்போனுக்கு, பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே தினசரி பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவலுடன் ஒரு குறுந்தகவல் வந்தது.
இதை உண்மை என நம்பிய நபிஷா குல்சும் அந்த 'குறுந்தகவலில்' தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார்.
அதன்பின் அவரது செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் லிங்குகளை அனுப்பி அந்த ஓட்டல்களின் தரம் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தர மதிப்பெண் கொடுத்தால் ரூ.100 முதல் ரூ.190 வரை தினசரி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, நபிஷா குல்சும் ஸ்டார் மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். அதில், அவருக்கு ரூ.100 தொடங்கி ரூ.10 ஆயிரம் வரை பணம் வந்தது. இதனால், அவர் மகிழ்ச்சியடைந்தார்.
குறுந்தகவல் அனுப்பி மோசடி
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் ஒரு குறுந்தகவலை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்குக்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக மோசடி நபர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நபிஷா குல்சும் அடுத்தடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார்.
ஆனால், கூடுதல் பணம் வரவில்லை. இதையடுத்து, நபிஷா குல்சும் அந்த நபர்களுக்கு மெசேஜ் மூலம் பதில் கேட்டுள்ளார். அதற்கு, அவர்கள் இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
சைபர் கிரைம் போலீசில் புகார்
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபிஷா குல்சும் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து `ஆன்லைன்' மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் மின்னூர் ரெயில்வே கேட் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத 25 வயது வாலிபர் பெங்களூர் சென்னை மார்க்கமாக செல்லும் ெரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ெரயிலில் இருந்து விழுந்திருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இவர் யார்? எந்த ஊர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்டுபிடித்து தருமாறு மனைவி கலெக்டரிடம் மனு
- ஆம்பூரில் இருந்து பணிக்குச் சென்றார்
ஆம்பூர்:
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் அசாம் மாநிலத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவருடைய மனைவி கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்விரோத கரணத்தால் விபரீதம்
- போலீசார் ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஆசனம்பட்டு ரோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சங்கர் வயது (32) ஆட்டோ டிரைவர்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆதீல் அஹமது (33) ஷூ கம்பனி தொழிலாளி என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்று இரவு சங்கரை வழி மடக்்கி ஆதீல்அஹமது சரமாரியாக தாக்கியதில் சங்கருக்கு மண்டை உடைந்து அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆதீல் அஹமதுவை ஆம்பூர் டவுன் போலீசார் கைது ஜெயிலில் அடைத்தனர்.






