என் மலர்
நீங்கள் தேடியது "2-வது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர்"
- குடும்ப தகராறில் காதல் மனைவி பிரிந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பி கஸ்பாவை சேர்ந்தவர் சத்யா (வயது 25). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் உடன் வேலை செய்யும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக சத்யாவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.
இதனால் அவர் மன உளைச்சலில் காணப்பட்டார். சத்யாவின் பெற்றோர் மகனுக்கு 2-வது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சத்யா திருமணத்திற்கு மறுத்து வந்தார். பின்னர் திடீரென நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






