என் மலர்
திருப்பத்தூர்
- வருகிற 7-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் முதல் முகாம் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 2-வது முகாம் வருகிற 7-ந் தேதி திருப்பத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் செய்து வருகிறது.
இதில், 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெருகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 8-ம் வகுப்பு முதல் பட்டயபடிப்பு, பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள், ஐ.டி.ஐ. முடித்த ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயன் பெறலாம் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் பீதி
- வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட் டம், நாட்டறம்பள்ளி பேரூ ராட்சி 4-வது வார்டு சாமுண்டீஸ்வரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் முருகன். பேரூராட்சி ஊழியர். இவரது வீட்டில் நள்ளிரவு சுமார் 1 மணி யளவில் திடீரென கரடி வந்துள்ளது.
அப்போது அந்த கரடி 4 அடி உயர காம்ப வுண்ட் சுவரை தாண்டி வீட்டுக்குள் குதித்தது. தொடர்ந்து வீட்டின் பக்கத்தில் உள்ள பூச்செ டிகள், வாகனங்களை உரசியபடி வீட்டின் பின்புறமுள்ள விவசாய நிலத்திற்கு சென்றது.
அப் போது, வழியில் நிறுத்தியிருந்த பைக் மீது கரடி உர சியுள்ளது. சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர், கரடி செல்வது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் வீட் டின் உரிமையாளரான பேரூராட்சி ஊழியர் முரு கனுக்கு தகவல் தெரிவித்துள் ளார். மேலும் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரித்தார்.
இன்று காலை முருகன் எழுந்து பார்த்தபோது,
அவரது வீட்டின் காம்ப வுண்ட் சுவர், தரைப்பகுதி யில் கரடியின் கால் தடம் பதிந்திருந்தது. பூச்செடிகள் சேதமாகியிருந்தது. கரடி யின் முடிகள் உதிர்ந்து கிடந்தது.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள நாயனசெருவு பகுதி யையொட்டி வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, நேற்று முன்தினம் இரவு நாயனசெருவு பகு தியில் சுற்றித்திரிந்துள் ளதை அப்பகுதி மக்கள் கண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நாட்டறம்பள்ளி யில் குடியிருப்புக்கு வந்தது தெரியவந்தது. இதைய றிந்த பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியுள்ள னர்.
தற்போது கரடி விவ சாய நிலத்தில் எங்கேனும் பதுங்கியிருக்கலாம் என வும், இரவு நேரங்களில் மீண்டும் குடியிருப்புகளுக்குள் புகும் வாய்ப்பு இருப்ப தால், அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண் டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
- குடும்ப தகராரில் விபரீதம்
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி கல் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி மகி (40) மனைவி கவிதா(35) இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆலான கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்தது
- போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மோட் டார் வாகன ஆய்வாளர் வெங்கட ராகவன் முன் னிலை வகித்தார்.
சென்னை தனியார் மருத் துவமனை உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 100 டிரைவர், கண் டக்டர்கள், பொதுமக்கள் பயன்பெற்றனர்.
அதன் பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் விளக்கி பேசினர்.
- முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்
- ஏரளமானோர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையம் சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் 21 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடை யாள அட்டைகள், 25 பேருக்கு பஸ் மற்றும் ரெயில் சலுகை பாஸ் உள்பட 88 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன் வழங்கினார்.
இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறன் நல முட நீக்கு வல்லுனர் இனியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- குழந்தை வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கல்லூரி செயலர் சிலிக்மிசந்த் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ம.இன்பவள்ளி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், சித்த மருத்துவர் விக்ரம்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வை யிட்டனர்.
இதில் துணை முதல்வர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வானங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.
இந்த நிலையில் துப்புர பணியாளர்கள் குப்பைகளை விரைந்து சேகரிக்க, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த வாகனங்களை நகர மன்ற தலைவர் எம். காவியாவிக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அப்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, நகர செயலாளர் ம. அன்பழகன், நகராட்சி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வணிகர் சங்கம் பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், வாணியம்பாடி தொழில் வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சி.ஸ்ரீதரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மதியம் 1 மணி வரை முழு கடையடைப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் கே.பி.எஸ் மாதேஸ்வரன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி வாணியம்பாடி முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி. கிருஷ்ணன், வாணி யம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், வாணியம்பாடி தி.மு.க. நகர செயலாளர் சாரதிகுமார், தொழில் அதிபர் ஆர்.ஆர்.வாசு உட்பட வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்தல்
- துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் டவுன் சிவராஜ் பேட்டை 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45). இவருடைய மனைவி சுமித்ரா(35). தம்பதியினர் மகன்கள் பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5) மகன் புருஷோத்தமன் (8 மாதம்). மணிகண்டன் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். சுமித்ரா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, புருஷோத்தமன் ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அபிநதி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் சிவராஜ் பேட்டை அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பொதுமக்களிடம் தூய நீரில் தான் டெங்கு வேகமாக பரவும். எனவே தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதோடு, போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- க.தேவராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றிய, பேரூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. மாணவரணியின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் சேலம் ரா.தமிழரசன், கா.அமுதரசன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகரம், 15 ஒன்றியம் மற்றும் 3 பேரூர் ஆகிய பகுதிகளுக்கான மாணவரணி அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்கள் பதவிக்கு பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்து கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
- வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத்( வயது 37), கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குட்டி நாக பாம்பு ஊர்ந்து சென்றது.
அப்போது குடிபோதையில் இருந்த அம்ஜத், நாக பாம்பு குட்டியை கையில் பிடித்தார். அப்போது பாம்பு அம்ஜத் கையை கடித்ததில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அம்ஜத்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டிலில் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நகராட்சி கமிஷனர் தகவல்
- 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பை நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அக்டோபர் மாதம் முதல் நிலுவைத் தொகைக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சதவீதமாக அபராதம் விதிக்கப்பட்டு சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023-2024-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியையும் வருகின்ற அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு உரிய காலத்திற்குள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி சொத்து வரிக்கான 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு நகராட்சி கமிஷனர் பழனி தெரிவித்துள்ளார்.






