search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கரடி
    X

    நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கரடி

    • பொதுமக்கள் பீதி
    • வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட் டம், நாட்டறம்பள்ளி பேரூ ராட்சி 4-வது வார்டு சாமுண்டீஸ்வரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் முருகன். பேரூராட்சி ஊழியர். இவரது வீட்டில் நள்ளிரவு சுமார் 1 மணி யளவில் திடீரென கரடி வந்துள்ளது.

    அப்போது அந்த கரடி 4 அடி உயர காம்ப வுண்ட் சுவரை தாண்டி வீட்டுக்குள் குதித்தது. தொடர்ந்து வீட்டின் பக்கத்தில் உள்ள பூச்செ டிகள், வாகனங்களை உரசியபடி வீட்டின் பின்புறமுள்ள விவசாய நிலத்திற்கு சென்றது.

    அப் போது, வழியில் நிறுத்தியிருந்த பைக் மீது கரடி உர சியுள்ளது. சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர், கரடி செல்வது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் வீட் டின் உரிமையாளரான பேரூராட்சி ஊழியர் முரு கனுக்கு தகவல் தெரிவித்துள் ளார். மேலும் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரித்தார்.

    இன்று காலை முருகன் எழுந்து பார்த்தபோது,

    அவரது வீட்டின் காம்ப வுண்ட் சுவர், தரைப்பகுதி யில் கரடியின் கால் தடம் பதிந்திருந்தது. பூச்செடிகள் சேதமாகியிருந்தது. கரடி யின் முடிகள் உதிர்ந்து கிடந்தது.

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள நாயனசெருவு பகுதி யையொட்டி வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, நேற்று முன்தினம் இரவு நாயனசெருவு பகு தியில் சுற்றித்திரிந்துள் ளதை அப்பகுதி மக்கள் கண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நாட்டறம்பள்ளி யில் குடியிருப்புக்கு வந்தது தெரியவந்தது. இதைய றிந்த பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியுள்ள னர்.

    தற்போது கரடி விவ சாய நிலத்தில் எங்கேனும் பதுங்கியிருக்கலாம் என வும், இரவு நேரங்களில் மீண்டும் குடியிருப்புகளுக்குள் புகும் வாய்ப்பு இருப்ப தால், அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண் டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

    Next Story
    ×