என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • படிகட்டில் இறங்க முயன்றபோது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    ஆலங்காயம் அடுத்த கோமட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), தனியார் பஸ் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    ரமேஷ் இன்று காலை பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல, தான் வேலை செய்யும் அதே பஸ்சில் பயணம் செய்தார்.

    வீட்டின் அருகே சென்றதும் அவர் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆலங்காயம் ஒன்றியம், துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்திவேல் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் சக்திவேல் இன்று காலை நாயக்கனேரி ஊராட்சி காமனூர் தட்டு பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறை அதிகாரி தகவல்
    • விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டது.

    அப்போது முருகன் வெளியே ஓடி வந்து பார்த்தார். அவர் கரடி ஓடி சென்றதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வன சரகர் குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால் பதித்த தடயங்களை ஆய்வு செய்தனர்.

    இந்த தகவல் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது .

    பொதுமக்கள் அச்சத்தில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறி வராமல் முடங்கினர்.

    மேலும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதா என வனவர் வெங்கடேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சம்பவம் இடத்திலேயே வீட்டின் பின்புறம் உள்ள ஓடை அருகே இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது கரடி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. மேலும் கரடி வந்ததற்கான தடயங்களும் இல்லை. எனவே கரடி கிராமத்திற்குள் வரவில்லை என வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

    வனத்துறையினர் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து வாணியம்பாடி வன சரகர் குமார் கூறியதாவது:-

    விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து கரடி நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்துள்ளோம்.

    முருகன் வீட்டில் பதிந்த கால் தடயங்களையும் மற்றும் வீட்டில் கிடைத்த முடிகளையும் சேகரித்து ஆய்வு செய்தோம். கரடி வந்து சென்றதற்கான எந்த தடயங்கள் உறுதியாக இல்லை.

    கரடியின் முடிகள் திடமாகவும், நீளமாகவும் இருக்கும். ஆனால் சேகரித்த முடிகள் மிகவும் மெல்லியதாக இருந்தது. மேலும் வீட்டிற்கு நுழைந்தது செந்நாய். இதனால் பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜ் (வயது 55), விவசாயி. மனைவி ராதா (50). தம்பதியினருக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர்.

    வரதராஜ் நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்தது. அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வரதராஜை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த வரதராஜ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்
    • போலீசார் சமரசம் செய்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனுர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி 3- வது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் சாலை மறியல்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி சம்பவ இடத்தில் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் அவர்களுடன் பேசி தீர்வு காணுவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் பானு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நண்பரை பார்க்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 22). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து நண்பரை பார்க்க சின்ன வேப்பம்பட்டு வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டி ருந்தார். திருப்பத்தூர்- வாணியம்பாடி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி விக்னேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஒரிசா மாநிலம் பகுதியைச் சேர்ந்த பிஷாய் மாஜ்ஜி (வயது 50). இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

    இவர் கேரளா மாநிலத்தில் கல் குவாரியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு ரெயில் மூலம் செல்ல திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்தார்.

    அப்போது நேற்று அதிகாலை திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே அருகே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர் தவறி விழந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    அந்த பகுதியில் உள்ள அஜித்குமார் (வயது 24) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளார்.

    அந்த சிறுமியிடம் அஜித்குமார் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
    • மாவட்டம் முழுவதும் யாருக்கும் டெங்கு பாதிப்பு கிடையாது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சி காமராஜர் நகர மற்றும் உதயேந்திரம், வாணியம்பாடி நகர பகுதியான திருமாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    வீடு வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க கூடிய புகை மருந்து அடிக்கப்பட்டது.டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் பழைய டயர்,தேங்காய் ஒடு ஆகியவற்றை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்களையும், டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த 40 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    முகாமில் காய்ச்சல், சளி, தொண்டைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ள வர்களை கண்டறியப்பட்டு அவர்களை கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் யாருக்கும் டெங்கு பாதிப்பு கிடையாது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

    ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, தாசில்தார் சாந்தி, மருத்துவ அலுவலர் அருள்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, வார்டு உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவர் பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு திடீரென கொக்கு மருந்து குடித்து இறந்து கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியிருப்பு அருகே நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(வயது30).

    இவர் திருப்பத்தூரில் ஆயுதப்படையில் போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தனது பைக்கை நிறுத்தினார். பின்னர் பணிக்குச் சென்றார்.

    மீண்டும் இன்று காலை அங்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பைக்கை திருடி சென்றுள்ளனர்.

    இதையடுத்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×