தொழிலாளி தவறி விழுந்து சாவு

தொழிலாளி தவறி விழுந்து சாவு
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது50) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு அரங்கல்துருகம் ஊராட்சி பகுதியில் உள்ள தனது அக்காள் புஷ்பா வீட்டிற்கு சென்றார்.

அவர் வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கட்டிலிருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும் 2 பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com