என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு பதிவு செய்து விசாரணை"

    • பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தார்வழிப் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 67). தனியார் ஷீ கம்பெனியில் காவலாளி. இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்படு சென்றார்.

    சாலையை கடக்கும் போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் பார்சல் லாரி குணசேகரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூரியர் பார்சல் லாரி டிரைவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆலங்காயம் ஒன்றியம், துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்திவேல் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் சக்திவேல் இன்று காலை நாயக்கனேரி ஊராட்சி காமனூர் தட்டு பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×