என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் வாலிபர் பிணம்
- மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆலங்காயம் ஒன்றியம், துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்திவேல் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் சக்திவேல் இன்று காலை நாயக்கனேரி ஊராட்சி காமனூர் தட்டு பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






