என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Honor by wearing garlands"
- காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் பானு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ அறிக்கை
- கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்
வேலூர்:
வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது
இதையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள அண்ணா சிலைகளுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் பா. கார்த்திகேயன் எம்.எல்.ஏ, டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி, அமுலு விஜியன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் நாளை காலை 9 மணி அளவில் காட்பாடி யிலும், 9-30 மணி அளவில் வேலூரிலும், 10 மணி அளவில் கே.வி.குப்பத்திலும், 10-30 மணி அளவில் குடியாத்தம் நகரிலும், 11 மணியளவில் அணைக்கட்டிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
எனவே மாநகர, ஒன்றிய, நகர பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர் நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள் வட்ட, வார்டு, ஊராட்சி கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்