search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    • வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ அறிக்கை
    • கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது

    இதையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள அண்ணா சிலைகளுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் பா. கார்த்திகேயன் எம்.எல்.ஏ, டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி, அமுலு விஜியன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் நாளை காலை 9 மணி அளவில் காட்பாடி யிலும், 9-30 மணி அளவில் வேலூரிலும், 10 மணி அளவில் கே.வி.குப்பத்திலும், 10-30 மணி அளவில் குடியாத்தம் நகரிலும், 11 மணியளவில் அணைக்கட்டிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    எனவே மாநகர, ஒன்றிய, நகர பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர் நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள் வட்ட, வார்டு, ஊராட்சி கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×