என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

    • குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் கற்கள் மற்றும் சல்லிகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

    இந்நிலையில் அதிகமான லாரிகள் அந்தப் பகுதி வழியாக செல்வதால் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது.

    இதனையடுத்துஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×