என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகள் முழு அடைப்பு, வியாபாரிகள் ஊர்வலம்
    X

    கடைகள் முழு அடைப்பு, வியாபாரிகள் ஊர்வலம்

    • முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வணிகர் சங்கம் பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், வாணியம்பாடி தொழில் வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சி.ஸ்ரீதரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

    அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மதியம் 1 மணி வரை முழு கடையடைப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் கே.பி.எஸ் மாதேஸ்வரன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி வாணியம்பாடி முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி. கிருஷ்ணன், வாணி யம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், வாணியம்பாடி தி.மு.க. நகர செயலாளர் சாரதிகுமார், தொழில் அதிபர் ஆர்.ஆர்.வாசு உட்பட வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×