search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதப்படை போலீசாரின் பைக் திருட்டு
    X

    ஆயுதப்படை போலீசாரின் பைக் திருட்டு

    • குடியிருப்பு அருகே நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(வயது30).

    இவர் திருப்பத்தூரில் ஆயுதப்படையில் போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தனது பைக்கை நிறுத்தினார். பின்னர் பணிக்குச் சென்றார்.

    மீண்டும் இன்று காலை அங்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பைக்கை திருடி சென்றுள்ளனர்.

    இதையடுத்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×