என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்"

    • நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ரூ.10 லட்சத்தில் அமைகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு குடியான குப்பம் ரெயில்வே கேட்டை கடக்கும் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக வார்டு கவுன்சிலர் ஜி. சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க. தேவராஜி அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதன் நடவடிக்கையாக ஜோலார்பேட்டை நகர மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர் தலைமையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்வே கேட்டை கடந்துள்ள பொதுமக்களுக்கு நிரந்தரமாக காவிரி கூட்டு குடிநீர் வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது.

    குடிநீர் வசதி ஏற்படுத்த குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    இதில் நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது நகர செயலாளர் அன்பழகன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் சங்கர், வார்டு கவுன்சிலர் ஜி. சக்கரவர்த்தி, பணி மேற்பார்வையாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×