என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 percent incentive"

    • நகராட்சி கமிஷனர் தகவல்
    • 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பை நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அக்டோபர் மாதம் முதல் நிலுவைத் தொகைக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சதவீதமாக அபராதம் விதிக்கப்பட்டு சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2023-2024-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியையும் வருகின்ற அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.

    எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு உரிய காலத்திற்குள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி சொத்து வரிக்கான 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு நகராட்சி கமிஷனர் பழனி தெரிவித்துள்ளார்.

    • நகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • ஒட்டன்சத்திரம் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் படி 2 ஆண்டு அரையாண்டுக்கான அக்டோபர் 2020 முதல் மார்ச் 2024 வரை சொத்து வரியை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் நிகர சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    மேலும் 2023 மற்றும் 2024 முதல் அரையாண்டு ஏப்ரல் 2003 முதல் செப்டம்பர் 2021 வரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் ஒரு சதவீதம் வசூல் செய்யப்படும் வரிகளை தங்கள் இல்லம் தேடி வருகை தரும் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்

    எனவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரிகளை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் மீனா தெரிவித்துள்ளார்.

    ×