என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை
- நகராட்சி கமிஷனர் தகவல்
- 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பை நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அக்டோபர் மாதம் முதல் நிலுவைத் தொகைக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சதவீதமாக அபராதம் விதிக்கப்பட்டு சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023-2024-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியையும் வருகின்ற அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு உரிய காலத்திற்குள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி சொத்து வரிக்கான 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு நகராட்சி கமிஷனர் பழனி தெரிவித்துள்ளார்.






