என் மலர்
நீங்கள் தேடியது "கோரிக்கை மீது உரிய நடவடிக்கை"
- 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 34 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்ற ப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதியளித்தார்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆ.செல்வ ராஜ், ஏ.மரியஜோசப், ஜி.சரவணன், எம்.பரிமளா, ஆர். மகேஸ்வரி, எம்.கீதா, பி.முனியம்மாள் பி.சந்தியா, ஆர்.ரஜினி, வி.ஆர். சரவணன், ஏ.ரமேஷ், கே.லில்லி, எம். சுகன்யா, ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா,பி.சந்தியா உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






