search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தது
    X

    சாலையில் விழுந்து கிடந்த பாறை.

    கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தது

    • வாகன ஓட்டிகள் அவதி
    • ஏலகிரி மலையில் பலத்த மழை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகள் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையின் காரணமாக ஏலகிரி மலையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்தத திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பாறைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×