search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவிலில் மழையிலும் அணையாமல் எரிந்த விளக்கு
    X

    கோப்புப்படம்

    பெருமாள் கோவிலில் மழையிலும் அணையாமல் எரிந்த விளக்கு

    • சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்
    • பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அடுத்த வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது.

    2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்த போதும், கொடி மரத்தில் ஏற்றப்பட்ட விளக்கு அணையவில்லை.

    மேலும் விளக்கில் மழைநீர் நிரம்பி எண்ணெய்யுடன் கலந்து தொடர்ந்து விளக்கு அணையாமல் எரிவதை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மேலும் அந்த கிராம மக்கள் சாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்.

    Next Story
    ×