என் மலர்tooltip icon

    தேனி

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது.
    • நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப் படுகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி 14707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரம் திடீரென பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 120 அடியை கடந்தது.

    இதனால் அணை யிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.35 அடியாக உள்ளது. அணைக்கு 680 கனஅடிநீர் வருகிறது. நேற்று முன்தினம் 1200 கனஅடிநீர் திறக்க ப்பட்ட நிலையில் நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.08 அடியாக உள்ளது. 858 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 89.97 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • விவசாயி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.
    • புகாரின்பேரில் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்க நாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது60). விவசாயி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மகன் சுருளிராஜ் தனது குடும்பத்து டன் சென்னையில் வசித்து வருகிறார்.

    விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் உறவினர்களுக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். பணத்ைத தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். தோட்ட வேலைக்கு உதவியாக முத்துகாமாட்சி என்பவர் இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று தோட்ட த்தில் இருந்த ஈஸ்வரி மதியம் சாப்பிட்டு வர முத்துகாமாட்சியிடம் வீட்டு சாவியை கொடுத்துள்ளார். அவர் மீண்டும் ேதாட்ட த்துக்கு வந்தார். பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற போது வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் வீடு புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி பைக்கை ஒரு கும்பல் பறித்து சென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் வட கரையை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது27). இவர் தேவதானப்பட்டி அருகே எழுவனம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து எழுவனம்பட்டி- செங்குளத்துப்பட்டி சாலையில் பன்றி பண்ைண அருகே வந்துகொண்டி ருந்தபோது ஒருவாலிபர் அவரை தடுத்து நிறுத்தினார். மேலும் பைக் சாவியை பறித்துக் கொண்டார்.

    இதனைத் ெதாடர்ந்து மேலும் 3 பேர் அவரை சுற்றி வளைத்து பணம் கேட்டு மிரட்டினர். அதில் ஒருவர் கத்தியை எடுத்து குத்த முயன்றதால் பயந்த சவுந்தரபாண்டியன் பைக்கை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் பைக்கை திருடிச் சென்றனர். தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் கண்ணன், மாதவன் ஆகியோரிடம் இது குறித்து எடுத்து கூறி 3 பேரும் பன்றி பண்ணை பகுதியில் வந்து பார்த்தனர். ஆனால் மிரட்டிய நபர்கள் அங்கு இல்லை. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் மற்றும் கும்பலை தேடி வருகின்ற னர்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை யின்படி திருநங்கைகளு க்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காக மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்திட உத்தரவிட ப்பட்டது.

    அதன்படி திருநங்கை களுக்கான குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். வீட்டு மனை, கல்வி கடன், அடையாள அட்டை, சுய தொழில் தொடங்க கடன், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    • குடிமகன்கள் தொல்லையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரம் செட் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக் குட்பட்டதாகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதானமாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சாலையோர ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தோட்டத்திற்கு செல்லும் வழியில் குடிமகன்கள் மது குடித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மிகவும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அணைக்கரை ப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன், போடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

    • மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது.
    • 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத தால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை யின்போது 142 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் 2-ம் போக பாசனம் முழுமைக்கும் தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 120 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி 121.55 அடி நீர்மட்டம் உள்ளது. மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது. நேற்று 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.

    பெரியாறு அணையிலி ருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 50.59 அடியாக உயர்ந்துள்ளது. 962 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 53.70 அடி யாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
    • தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் ஆளவந்தார் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யபப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு இருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கு ரூ. 1500 அபராதம் விதித்தனர். ஆய்வின்போது இளநிலை உதவியாளர் பாத்திமா, வரித்தண்டலர், பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு செயல்அலுவலர் ஆளவந்தார் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல்சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் ரோகிணி தலைமையில் பணியாளர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஒட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் தலைமையிலான போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது வீரபாண்டியைச் சேர்ந்த சுபாஷ்குமார் (வயது 21), சின்னமனூரைச் சேர்ந்த முனீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் 320 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வயல்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் மனஉளைச்சலில் இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி கவுதமி (வயது27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணசாமி மது குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் பிரச்சினை செய்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவுதமி விஷம் குடித்து மயங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமியும் விஷம் குடித்துள்ளார். 2 பேரையும் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதமி உயிரிழந்தார். கிருஷ்ணசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி கருப்பாயம்மாள் (56). பால் பண்ணை வைத்து நடத்தி வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த கருப்பாயம்மாள் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, லோயர்கேம்ப், ஹைவேவிஸ், மேகமலை, இரவங்கலாறு, உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணப்புரம், மல்லிங்கா புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையான்பட்டி,

    அணைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
    • தேனியை சேர்ந்த மாணவர்கள் 5 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    தேனி:

    கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தமிழக அணியின் சார்பாக தேனி அருகே உள்ள ,கொடுவி லார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை மாணவர்கள் அஸ்வின், சர்வேஷ் கோபால், மோகன்தாஸ், மோகித்குமார், வசுநந்தன் ஆகிய வீரர்கள் வயது மற்றும் எடையின் அடி ப்படையில் கலந்து கொண்டு 5 தங்க பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை நிறுவனர் மற்றும் சிலம்ப ஆசான் ஈஸ்வரன் மாண வர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதோடு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெளி மாநிலங்களில் நடைபெறும் சிலம்பம் போட்டிகளுக்கு அழைத்து சென்று போட்டியில் தங்க பதக்கங்கள் பெறும் அளவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய ஆணையர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஆணையர்கள் பதிலளித்தனர். கூட்டத்தில் ஒன்றிய மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×