என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Happy Sunday"

    • பெரியகுளத்தில் போலீசார் மற்றும் பெரியகுளம் விளையாட்டு கழகம் சார்பில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்- பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் போலீசார் மற்றும் பெரியகுளம் விளையாட்டு கழகம் சார்பில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடைபெற்றது. உடற்பயிற்சி, கலை, யோகா, பரதம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் முதல் வாரமான இன்று காலை 6 மணிக்கு முதலில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிகள் 6 வயது முதல் 13 வயது வரை ஒரு பிரிவிலும், 14 வயது முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு தனியாக ஒரு பிரிவும், போலீசாருக்கு தனியாக ஒரு பிரிவும், 18 வயதுக்கு மேல் பட்ட அனைவருக்கும் தனியாக ஒரு பிரிவும் என 4 பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்- பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து பரதம், யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாரத்தான் போட்டியை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே தொடங்கி வைத்தார். போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×