கம்பத்தில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்

தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

கம்பம்:

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சட்டத்தினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தார். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். போட்டியானது கம்பம் கோம்பை சாலையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் தொடங்கி, கோம்பை ரோடு, சந்தை திடல், மெயின் ரோடு வழியாக கம்பம் அரசு மருத்துவமனையை சென்றடைந்து. அங்கிருந்து மெயின் ரோடு வழியாக கம்பம் மெட்டு ரோடு, புது பள்ளிவாசல், தங்க விநாயகர் கோயில் வழியாக தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com