search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை பூஜை
    X

    சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தேனி அருகே சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை பூஜை

    • தேனி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி அருகே நாகலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ஏகதின பூஜையை முன்னிட்டு பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக குழு தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். கோவில் டிரஸ்டி வெங்கடேசன், பொருளாளர் கணபதி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பூஜை நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான பூஜையை பட்டாச்சாரியார்கள் மணிவண்ணன், சீதாராமன், பாபு உள்பட பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×