என் மலர்tooltip icon

    தேனி

    • பெரியகுளத்தில் போலீசார் மற்றும் பெரியகுளம் விளையாட்டு கழகம் சார்பில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்- பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் போலீசார் மற்றும் பெரியகுளம் விளையாட்டு கழகம் சார்பில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடைபெற்றது. உடற்பயிற்சி, கலை, யோகா, பரதம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் முதல் வாரமான இன்று காலை 6 மணிக்கு முதலில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிகள் 6 வயது முதல் 13 வயது வரை ஒரு பிரிவிலும், 14 வயது முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு தனியாக ஒரு பிரிவும், போலீசாருக்கு தனியாக ஒரு பிரிவும், 18 வயதுக்கு மேல் பட்ட அனைவருக்கும் தனியாக ஒரு பிரிவும் என 4 பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்- பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து பரதம், யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாரத்தான் போட்டியை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே தொடங்கி வைத்தார். போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அறிவகம் அதன்பின்னர் மீண்டும் பணிக்கு சென்றார்.
    • அறிவகத்தின் உடலை நாளை சொந்தஊர் கொண்டுவர உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடையை சேர்ந்தவர் அறிவகம்(36). இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 16 வருடத்திற்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி பஞ்சாப் மாநிலத்தில் கடைசியாக பணியாற்றினார்.

    கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அறிவகம் அதன்பின்னர் மீண்டும் பணிக்கு சென்றார். பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் தங்கியிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவருடன் பணிபுரிந்தவர்கள் அறிவகத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்.

    இதுகுறித்து சொந்தஊரில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறிஅழுதனர். அறிவகத்தின் உடலை நாளை சொந்தஊர் கொண்டுவர உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். பணிக்கு சென்ற ராணுவவீரர் உயிரிழந்ததால் அந்த கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • ஆசிரியையின் கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது.
    • போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு விஜயபானு (வயது 47) என்பவர் இடை நிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை விஜயபானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குடிநீர் வாரிய ஊழியர் படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே குன்னூர் வள்ளல்நதி கூட்டுகுடிநீர் திட்ட தற்காலிக குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் பெரியசாமி(48). இவருக்கு திருமணமாகவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் வைகையாற்று கிழக்குகரை பகுதியில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் தண்ணீர் திறந்துவிடும் பணி மேற்கொண்டு வந்தார்.

    சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் போஜம்மாள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனியில் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    • ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்ம னைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கொடுவிலா ர்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தி லிருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பஸ் நிலையம் வரை 10 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 125 நபர்களும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 நபர்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேனி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி அருகே நாகலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ஏகதின பூஜையை முன்னிட்டு பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக குழு தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். கோவில் டிரஸ்டி வெங்கடேசன், பொருளாளர் கணபதி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பூஜை நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான பூஜையை பட்டாச்சாரியார்கள் மணிவண்ணன், சீதாராமன், பாபு உள்பட பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஹைவேவிஸ் பகுதியில் மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.
    • 6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ள ஹைவேவிஸ் பகுதியில் மேகமலை, மணலாறு, வெண்ணியார், மகாராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுற்றுலா வந்தவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நித்தியா (வயது34), திவ்யா (28), சத்யா (38), விஜய்கிருஷ்ணா (10), மகேஷ்வரன் (40) ஜெயப்பிரியா(32) உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்ற 16 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விசாரணையில் மதுரை காமராஜர் பல் கலைக்கழகம் அருகில் உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கையா (48) என்பவர் உறவினர்களை தனது சொந்த வேனில் அழைத்துக் கொண்டு சுற்றுலா வந்தது தெரிய வந்தது.

    • தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
    • அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்து தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பால் வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குநர் வினித் முன்னிலை வகித்தனர்.

    மேலும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். தங்கதமிழ்செல்வன், லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பாலகத்தில் தேவையான குளிரூட்டும் கருவிகள், பன்னீர் தயாரிக்கும் எந்திரம், பாதாம் பொடி தயாரிக்கும் எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களும், ஆவின் நெய், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கிரீம், நறுமண பால், தயிர், மோர் மற்றும் பால்பவுடர் போன்ற பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தரமானதாகவும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பாலகத்தின் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் திறன் கொண்ட குளிரூட்டும் நிலையத்திற்கு மாவட்டத்திலுள்ள 444 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம், நாள் ஒன்றிற்கு 50,000 லிட்டர் கொள்முதல் செய்து குளிரூட்டப்பட்டு, மதுரை மற்றும் பிற மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் வாகனங்கள் மூலம் தினமும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கு பால் கறவை மாட்டுக் கடன் உதவிகளும், ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் 29 பயனாளிகளுக்கு கறவை மாடு பராமரிப்பு கடன் உதவிகளும், ரூ.19.54 லட்சம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தாட்கோ மூலம் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.35,250 மதிப்பிலான தீவன விதைகளுக்கான கடன் உதவிகளும், 218 பயனாளிகளுக்கு ரூ.96.56 லட்சம் மதிப்பீட்டில் பால் தர பரிசோதனை கருவிகளும், சிறுபால் பண்ணை அமைப்பதற்காக ஒரு குழுவிற்கு ரூ.66 7. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், மகளிர் திட்டத்தின் மூலம் 3 குழுக்களுக்கு ரூ.24.50 லட்சம் கடனுதவிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் பால் மாட்டுக்கடனாக 71 பயனாளிகளுக்கு ரூ.42.86 லட்சம் கடனுதவிகளும் என மொத்தம் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தேனி மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகப்படியான பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக நெய் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.20 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். இதன்மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக ஆண்டிபட்டி, வேலப்பர் கோவில், தெப்பம்பட்டி, கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ஜம்புளிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து 674 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 51.44 அடியாக உள்ளது. விரைவில் 52 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.20 அடியாக உள்ளது. 266 கனஅடிநீர் வருகிறது. 600 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 0.8, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2, வைகை அணை 11, வீரபாண்டி 3.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.
    • கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.

    அப்போது 3 பேர் பைக்குடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது கஞ்சா விற்பனை செய்வதற்காக பைக்கில் வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிவதேசிங்கு (வயது25) மற்றும் கொடைக்கானலை சேர்ந்த பாபு (25), சிவசண்முகம் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • குடும்ப தகராறில் கணவன் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றார்.
    • புகாரின்பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் 6-வது வார்டு அருந்ததியர் ஓடைத்தெரு வை சேர்ந்தவர் உதய குமார்(31). இவரது மனைவி ராஜலட்சுமி(28). உதய குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் அவரது சகோதரிகளை தரக்குறை வான வார்த்தை களால் திட்டி வந்துள்ளார்.

    இதனை ராஜலட்சுமி கண்டிக்கவே அவர்களு க்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி உதயகுமார் கொலை செய்ய முயன்றார். ராஜலட்சுமி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றினர்.

    இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

    • கணவர் இறந்த நிலையில் மகளும் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் தாய் மன விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
    • விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து மனைவி மீனா(49). இவர்களுக்கு முருகேஸ்வரி என்ற மகள் இருந்தார்.

    சின்னமுத்து உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் முருகேஸ்வரியை போஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். முருகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தனது கணவன் மற்றும் மகள் அடுத்தடுத்து இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனா யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று மீனா தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×