மாரத்தான், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் -கலெக்டர் வழங்கினார்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பாக 4 பேர்களுக்கு தலா ரூ. 9,050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 2 பேருக்கு பராமரிப்புக்கான பாதுகாவலர் நியமனச் சான்றுகளையும் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

மேலும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெ க்டர் வழங்கினார். மேலும் திருநங்கை களுக்கான பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

இதே போல் தமிழ் வளர்ச்சி த்துறையின் சார்பில் ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com