என் மலர்
தேனி
- நவீன தொழில்நுட்ப முறையில் ரோபோடிக் செய்முறை பயிற்சிக்கான கூட்டு முயற்சி தொடக்க விழா நடைபெற்றது.
- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் கிட் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் நவீன தொழில்நுட்ப முறையில் ரோபோடிக் செய்முறை பயிற்சிக்கான கூட்டு முயற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார். பள்ளியின் செயலர் மாத்யூ ஜோயல் வாழ்த்தி பேசினார்.
மேலும் விழாவில் எடோவேட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தேவி ஸ்ரீ மற்றும் எமில் ராஜ் ஸ்டான்லி ஆகியோர் பேசினர். பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் கிட் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருவதால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட த்தில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது
கூடலூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட த்தில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பீர்மேடு, குமுளி, தேக்கடி பார்க்கிங் மைதானம், வண்டி பெரியாறு, குட்டிக்கானம், வாகமன், அய்யப்பன் கோவில் ஊராட்சி பகுதிகள், தொடுபுழா, உடும்ப ன்சோலை, ே தவி குளம் உள்பட பல்வேறு பகுதி களில் 37 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பைக், ஆட்டோ க்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் மின் கம்பங்களில் பொருத்த ப்பட்ட சார்ஜிங் பாயி ண்ட்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நரகங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட்டு ள்ளது. இவை தவிர தொடு புழா, இடுக்கு, மூணாறு ஆகிய பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இடுக்கி மாவட்டத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சார்ஜிங் நிலைய பயன்பாடும் அதிகரித்துள்ளது. மின் கம்பங்களில் இருந்து ஒரு வாகனத்தை சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.9.30 வரை செலவாகிறது. ஒரு பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் 4 யூனிட் மின்சாரமும், ஆட்டோவுக்கு 4 முதல் 7 யூனிட் மின்சாரமும் செல வாகிறது.
பெட்ரோல், டீசலின் விலையை விட மின்சாரம் சார்ஜிங் கட்டணம் குறைவாக உள்ளது. மேலும் மலைப்பகுதியில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சார்ஜிங் பாயிண்ட் அதிகரிக்க பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- வரத்து 835 கன அடி. நேற்று வரை 600 கன அடி திறக்க ப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 400 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.
- அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்ப ட்டதால் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் குறைந்துள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதே போல் தேனி மாவட்டத்திலும், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக முல்லை ப்பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் 121.30 அடியாக உள்ளது. வரத்து 835 கன அடி. நேற்று வரை 600 கன அடி திறக்க ப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 400 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது. நீர் இருப்பு 2885 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்ப ட்டதால் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் குறைந்துள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 51.64 அடியாக உள்ளது. வரத்து 408 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2214 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.85 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 89.51 அடியாகவும் உள்ளது. போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த மழை காரணமாகவும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான அரசரடி வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாகவும் மூல வைகை ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் வைகை அணையின் நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பெரியாறு 8, தேக்கடி 27.6, போடி 3.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
- உத்தமபாளையம் அருகே பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
தேனி மாவட்டம் மேகமலை ஹைவேவிஸ் எஸ்டேட் பேன்சா காலனியைச் சேர்ந்தவர் மந்திரி மகன் கவுதம் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான மனோஜ் (16), ராஜா (15) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
உத்தமபாளையம் அருகே புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்த ஷர்மா (22) என்பவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கவுதமின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தேவதானப்பட்டி:
இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் தேவதானப்பட்டி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தொடங்கி வைத்தார்.
இதில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் முன்னிலை வகித்தார். பாண்டி, முன்னாள் சேர்மன் ஸ்டாலின் குணா, பேரூர் செயலாளர் திலகர், பேரூர் பொருளாளர் சக்தி, மாவட்ட சிறுபான்மையினர் அமைப்பாளர் சேக்அப்துல்லா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் உமேஷ் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜஸ்டன் திரவியம் மகள் பபிதா (வயது16). இவர் பெரியகுளத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பபிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி-2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
- இந்த கண்காட்சியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என 11 அரங்குகள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தன.
தேனி:
தேனி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி-2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கண்காட்சிக்கு தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் ஹனிமன், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை அதிகாரி ராமசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் ஆலோசகர், முன்னாள் தலைவர் ஜவஹர், தேனி ஆயுஷ் மருத்துவமனை மாரியப்பன், கன்னியாகுமரி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் செயலாளர்எபிமோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என 11 அரங்குகள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியில் மதுரை அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர்கள் பாவலன், ஞானபிரகாசம், தேனி ஹோமியோபதி சங்க தலைவர் ஹனிமன் ஹோமியோ மருத்துவமனை சரவணன், செயலாளர் நாராயணன், பொருளாளர் விஜயராஜன் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமான ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தியாகராஜன், ராஜ்குமார், கார்த்திகேயன், மரகதம் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
- வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.
- இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது48). இவரது மனைவி கவுரி.குழு அமைத்து பலரிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த விஜயசாரதி விஷம் குடித்து மயங்கினார். சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.
தேனி:
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாளை முதல் 20ந் தேதி வரை 8 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
11-ந் தேதி தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 12-ந் தேதி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 13-ந் தேதி போடிநாயக்கனூர் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி, 17-ந் தேதி சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி (காலனி) மற்றும் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, 18-ந் தேதி கம்பம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி (உத்தமபுரம்), 19-ந் தேதி பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலைப் பள்ளி, 20-ந் தேதி மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 8 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல்,தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 6, குடும்ப அட்டை நகல் , ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.381.76 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது.
- கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், தோட்ட தொழிலாளர்கள் செல்லும் ஜீப்கள், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் லாரிகள், அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
கேரளாவுக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு என 3 சாலை வழியாக சென்று வருகின்றனர். இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மூணாறு மலைச்சாலை உள்ளது.
போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.381.76 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்ற நிலையில் சாலை யை அதிகாரப்பூர்வமாக தற்போது திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17ந் தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் மத்திய மந்திரி நிதின் கட்கரி வர இயலவில்லை. இதனால் சாலை திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற 12-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்கரி மூணாறு-போடி மெட்டு என்ற சாலையை திறந்து வைக்கிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதேபோல் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செருதோணி பாலத்தையும், அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை என்.எச்.185 அகலப்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதில் கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் வளைந்து நெழிந்து செல்லும் சாலையில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
- விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 19-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 62). விவசாயி. இவருக்கு சொந்தமான நெல் வயல் வெட்டுக்காடு பகுதியில் உள்ளது. இதில் தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூரில் உள்ள ஒரு உரக்கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி பாண்டியன் தனது வயலுக்கு தெளித்தார். அப்போது திடீரென வயலில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் கூடலூர் முனுசாமி கோவில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (42) என்ற விவசாயி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெல் வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த போது மயங்கி விழுந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 28-ந்தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து 2 விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் உரக்கடைகளில் ஆய்வு செய்து மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து வேளாண்மை அலுவலர் தெரிவிக்கையில், உரக்கடையில் மாதம் தோறும் முறையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2 விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளை ஆய்வு செய்து மருந்துகளை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.
மேலும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.
- சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கம்பம்:
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சட்டத்தினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தார். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். போட்டியானது கம்பம் கோம்பை சாலையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் தொடங்கி, கோம்பை ரோடு, சந்தை திடல், மெயின் ரோடு வழியாக கம்பம் அரசு மருத்துவமனையை சென்றடைந்து. அங்கிருந்து மெயின் ரோடு வழியாக கம்பம் மெட்டு ரோடு, புது பள்ளிவாசல், தங்க விநாயகர் கோயில் வழியாக தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது.
போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.






