search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கம்பத்தில் ஐஸ் வண்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    செல்லப்பாண்டி

    கம்பத்தில் ஐஸ் வண்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    • ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார்.
    • சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கிராமசாவடி பகுதியில் ஐஸ் கடை மற்றும் பன் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது ஐஸ் கடையில் இளைய மகன் செல்லப்பாண்டி (வயது34) உடன் பணிபுரிந்து வந்துள்ளார். காலையிலிருந்து ஐஸ் வண்டிகள் வெளியே சென்று விற்பனையை முடித்துவிட்டு மீண்டும் இரவு ஐஸ் கம்பெனிக்கு வந்தடைந்து விடும். பின்னர் அதற்கு மின்சாரம் கொண்டு சார்ஜ் செய்வது தினசரி வாடிக்கையான ஒரு செயலாக இருந்து வருகிறது.

    அந்த ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார். சார்ஜ் செய்வதற்காக சுவிட்ச் ஆன் செய்துவிட்டு வந்தபோது வண்டியில் இருந்து மின்சாரம் எதிர்பாராத விதமாக செல்லப்பாண்டி மீது பாய்ந்தது.

    உடனே அவர் பயங்கர சத்தம் போட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அடுத்து அங்கு இருந்த மின்சார சுவிட்ச் அனைத்தையும் அணைத்து விட்டு பின்னர் செல்லப்பாண்டியை வந்து பார்த்துள்ளனர். அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனை அடுத்து அவர்கள் அருகே இருந்த ஆட்டோ மூலம் செல்லப்பாண்டியை உடனடியாக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லப்பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×