என் மலர்
நீங்கள் தேடியது "Manthaiyamman Temple Festival"
- மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 80 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
- போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பம் உத்தமபுரம் பிரமலைக்கள்ளர் இளைஞர் அணி மகாசபை சார்பில் 36 இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 80 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியானது கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வரை சுமார் 8 கி.மீ தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது.
மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.






