என் மலர்tooltip icon

    தேனி

    • குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே கோரையூத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் மனைவி பானுப்பிரியா(30). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பானுப்பிரியாவின் தந்தை முருகன் அவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

    இதனால் அவர் தந்தை வீட்டிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்தை திருப்பி தந்துவிட்டார். அதிலிருந்து தந்தை-மகள் 2 பேரும் சரியாக பேசிகொள்வதில்லை. இந்த நிலையில் பானுப்பிரியா விஷம் குடித்து மயங்கினார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனியில் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
    • இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினர் குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் மரபும், நாகரீகமும், பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு "மாபெரும் தமிழ் கனவு"சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்திட உத்தரவிட்டு, செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி, வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போடி அரசினர் பொறியியல் கல்லூரியில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வில் "கல்வியால் கடந்த காரிருள்" என்னும் தலைப்பில் கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஸ்யபுத்திரன் சிறப்புரையாற்ற உள்ளார் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கொடைக்கானலில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வறண்டுகிடந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 51 அடியை எட்டும் போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை, அதனைதொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

    தற்போது அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 23 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 866 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.13 அடியாக உள்ளது. 374 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது. 26 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 6.4, கூடலூர் 14.2, சண்முகாநதிஅணை 13.6, மஞ்சளாறு 7, பெரியகுளம் 3.6, வீரபாண்டி 4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார்.
    • சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கிராமசாவடி பகுதியில் ஐஸ் கடை மற்றும் பன் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது ஐஸ் கடையில் இளைய மகன் செல்லப்பாண்டி (வயது34) உடன் பணிபுரிந்து வந்துள்ளார். காலையிலிருந்து ஐஸ் வண்டிகள் வெளியே சென்று விற்பனையை முடித்துவிட்டு மீண்டும் இரவு ஐஸ் கம்பெனிக்கு வந்தடைந்து விடும். பின்னர் அதற்கு மின்சாரம் கொண்டு சார்ஜ் செய்வது தினசரி வாடிக்கையான ஒரு செயலாக இருந்து வருகிறது.

    அந்த ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார். சார்ஜ் செய்வதற்காக சுவிட்ச் ஆன் செய்துவிட்டு வந்தபோது வண்டியில் இருந்து மின்சாரம் எதிர்பாராத விதமாக செல்லப்பாண்டி மீது பாய்ந்தது.

    உடனே அவர் பயங்கர சத்தம் போட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அடுத்து அங்கு இருந்த மின்சார சுவிட்ச் அனைத்தையும் அணைத்து விட்டு பின்னர் செல்லப்பாண்டியை வந்து பார்த்துள்ளனர். அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனை அடுத்து அவர்கள் அருகே இருந்த ஆட்டோ மூலம் செல்லப்பாண்டியை உடனடியாக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லப்பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த பெண் சம்பவத்தன்று தனது 11 வயது மகன் சக்திவேல் உடன் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகே ஸ்வரன் மனைவி சத்யா (வயது 28). இவர்களுக்கு சக்திவேல், ராமர்லெட்சு மணன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரன் கடந்த 1 வருட த்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது முதல் சத்யா தனது 3 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த சத்யா சம்பவத்தன்று தனது மகன் சக்திவேல் (வயது 11) உடன் மாயமானார்.

    அவரது தாய் மாரியம்மாள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரை யும் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காஜா மைதின் மகள் சூரத் நிஷா (18). இவர் உத்தமபாளை யத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை உத்தம பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    • தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 91.34 அடியாக உள்ளது. வரத்து 27 கன அடி. திறப்பு 3 கன அ டி. இருப்பு 50.71 மி.கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று 121.30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 121.60 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 835 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1105 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2945 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 52 அடியை எட்டியது. நீர் வரத்து 616 கன அடி. தண்ணீர் திறப்பு 69 கன அடி. இருப்பு 2259 மி.கன அடி.

    தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.90 அடியாக உள்ளது. ஏற்கனவே தேனி, திண்டுக்கல் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 54 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

    அணைக்கு நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 413.15 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 91.34 அடியாக உள்ளது. வரத்து 27 கன அடி. திறப்பு 3 கன அ டி. இருப்பு 50.71 மி.கன அடி.

    உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 0.8, போடி 24, வைகை அணை 40, சோத்துப்பாறை 4, பெரியகுளம் 3.4, வீரபாண்டி 38, அரண்மனைப்புதூர் 27.2, ஆண்டிபட்டி 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆண்டிபட்டி:

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை யில் மகப்பேறு டாக்டர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வலியுறுத்தியும், அரசு மகப்பேறு டாக்ட ர்களை முகாம்களில் பங்கேற்க வைப்பதை தவிர்க்கவும்,

    மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேரா சிரியர்களை மரியாதை இல்லாமல் பேசிய மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜெய் கணேஷ், செயலாளர் அரவாளி, பொருளாளர் பால கிருஷ்ணன், டாக்டர்கள் சிவா, பிரேமலதா, ருக்மணி, வனிதா, மகாலட்சுமி உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.
    • 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாட்ராயன் தலைமையிலான போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.

    அதில் வந்த கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த பாண்டி (வயது33), கவுதம் (33), குரங்குமாயன் தெருவை சேர்ந்த கார்த்திக் (29), சூரியன் (34) ஆகியோர் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர். போலீசார் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த னர்.

    இதேபோல் கூடலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பாலு (71) என்பவர் 120 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் 2 தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி லெட்சுமிபுரம் நடுத்தெரு வைச் சேர்ந்தவர் பிரேம்கு மார் (வயது 34). இவருக்கும் இலக்கியா (24) என்பவரு க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரேம்குமார் குடிப்பழக்க த்துக்கு அடிமையானவர்.

    சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சென்றவர் குப்பிநாயக்கன்பட்டி சாலையில் சுய நினை வில்லாமல் கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று தனது கணவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் அருகே உள்ள தாத்தப்பன்குளம் 9-வது வார்டு பகுதியைச் சேர்ந்த வர் ெபான்ராஜ் (49). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழ க்கத்துக்கு அடிமையானவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்ததால் தனது குடும்ப த்தினருடன் சண்டை போட்டு வெளியே சென்றார்.

    மீண்டும் அவரை அறிவுரை கூறி அழைத்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே பொன்ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளை ச்சல் அமோகமாக உள்ள தால், அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரமடை ந்துள்ளன.
    • பெரியாறு அணை மூலம் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் விளைச்சல் இந்த ஆண்டும் திருப்திகரமாக உள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளை ச்சல் அமோகமாக உள்ள தால், அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரமடை ந்துள்ளன. விளைச்சல் திருப்திகரமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டி பட்டி வரை இருபோக நெல் சாகுபடிநடைபெற்று வருகிறது. 14,707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் விவசாய பணிக்கு, முல்லை பெரியாறு அணை யிலிருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்க ப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தலை மதகு விவசாயப் பகுதியான கூடலூரிலிருந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கை யன்கோட்டை, வீரபாண்டி என அடுத்தடுத்து விவசாய பணிகள் தொடங்கின. தனியே நாற்று பாவி பின்பு வயல்களில் நடவு செய்ய ப்பட்டன.

    நடவு செய்ய ப்பட்ட இந்த நாற்று கள் தற்போது நெல்மணி களுடன் திரட்சியாக காட்சி அளிக்கின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டும் நெல் விளைச்சல் நன்றாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கையன்கோட்டை, க.புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளன. இன்னும் சில வாரங்களில் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளன.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரியாறு அணை மூலம் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் விளைச்சல் இந்த ஆண்டும் திருப்திகரமாக உள்ளது. சில இடங்களில் நீர் திறப்புக்கு முன்பாகவே நடவுப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டன. இதனால் குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னதாகவே அறுவடை தொடங்க வாய்ப்புள்ளது என்றனர்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பாக 4 பேர்களுக்கு தலா ரூ. 9,050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 2 பேருக்கு பராமரிப்புக்கான பாதுகாவலர் நியமனச் சான்றுகளையும் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    மேலும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெ க்டர் வழங்கினார். மேலும் திருநங்கை களுக்கான பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

    இதே போல் தமிழ் வளர்ச்சி த்துறையின் சார்பில் ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    • தேனி மாவட்ட மீன்வள த்துறை, போடி நகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கெட்டுப்போன மீன்கள் கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை யினர் அவற்றைக் கைப்பற்றி குளோரின் பவுடர் கொட்டி 25 கிலோ மீன்களை அழித்தனர்.

    மேலசொக்கநாதபும்:

    தேனி மாவட்டம் போடியில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து இன்று காலை தேனி மாவட்ட மீன்வள த்துறை, போடி நகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள மீன்கள் தரம் உள்ளவையா அல்லது பார்மலின் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உபகரணங்கள் மூலம் ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அவர்கள் மீன்கள் பாதுகாத்து வைத்திருக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது உரிய குளிர்சாதன வசதி இன்றி கெட்டுப்போன நிலையில் துர்நாற்றம் வீசிய மீன்கள் இருப்பு வைக்கப்பட்டி ருந்ததை கண்டறிந்து உடனடியாக அந்த மீன்களை கைப்பற்றினர்.

    மேலும் மாலை வேலைகளில் பொரித்து விற்பனை செய்வதற்காக மசாலா தடவி வைக்கப்பட்ட மீன்களும் கெட்டுப்போன பெட்டியில் இருப்பு வைத்து இருந்தது கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை யினர் அவற்றைக் கைப்பற்றி குளோரின் பவுடர் கொட்டி 25 கிலோ மீன்களை அழித்தனர்.

    மேலும் அவர்கள் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை கண்டறிந்து நகராட்சி சுகாதாரத் துறையினர் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த னர். இனி இதுபோன்று கெட்டுப் போன மீன்களை வியாபாரம் செய்தாலோ அல்லது விதிமுறைகளை மீறி உணவுப் பொருள்களை பாதுகாப்பின்றி வைக்க ப்பட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

    கெட்டுப்போன மீன்களை வைத்திருப்ப தற்காக அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தேனி மாவட்ட மீன்வள த்துறை அலுவலர் பாண்டி யன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா, போடி நகராட்சி சுகாதார த்துறை அலுவலர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

    ×