என் மலர்
தேனி
- வருசநாடு-வாலிப்பாறை சாலை கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
- வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருநாடு:
வருசநாடு -வாலிப்பாறை இடையே சுமார் 5 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் அங்கு சாலை அமைக்க அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக சாலையை பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
மேலும் நேற்று வருசநாடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. இதனால் ஆட்டோ க்களில் செல்லமுடியாத நிலையில் பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் பைக்கில் செல்பவ ர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே மாவட்ட அதிகாரிகள் வனத்துறை யினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர் மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று வரை 800 கனஅடிநீர் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு 1000 கனஅடியாக அதிகரி க்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம்136 அடிவரை உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.
வைகை அணை யின்நீர்ம ட்டம் 53.18 அடியாக உள்ளது. அணைக்கு 884 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின்நீ ர்மட்டம் 54.75 அடியாக உள்ளது. 35 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.02 அடியாக உள்ளது. 28 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 7, தேக்கடி 101.4, கூடலூர் 1, உத்தம பாளையம் 3.8, சண்முகா நதிஅணை 2.4, வைகை அணை 3.6, மஞ்சளாறு அணை 18, சோத்துப்பாறை 2, ஆண்டிபட்டி 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.
- சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆண்டி பட்டி, பாலகோம்ைப, புள்ளிமான்கோம்பை, கதிர்நரசிங்கபுரம், ஜம்புளிபுத்தூர், சண்முகநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கனமழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனதட்டுப்பாடும் நீங்கும் என அவர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அருகில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மழைநீர் புகுந்தது.
இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவ ர்கள் சிரமம் அடைந்தனர். ஓரத்தில் கற்களை அடுக்கி வைத்து வகுப்பறைக்குள் சென்றனர். பள்ளி மைதானத்தில் நடைபெறும் காலை பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டது.
மழைநீர் அகற்றப்படாத தால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பள்ளியில் ஒவ்வொரு முறையும் கனமழை காலங்களில் வளாகத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் அமைத்து மாணவர்களுக்கு சுகாதார மான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோல் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளி விளையட்டு மைதானத்தி லும் இன்று மழை நீர் தேங்கி இருந்ததால் மாணவ-மாணவிக்ள சிரமம் அடைந்தனர்.
- போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
- தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும்.
தேனி:
தேனி மாவட்டம் பெரிய குளம், உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.,
இதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பு வோர் ரூ.1000 முன்பணம் செலுத்தி ஏலத்தேதிக்கு முன்பு ரசீது பெற்றுகொள்ள வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்ப வருக்கே வாகனங்கள் வழங்கப்படும்.
ஏலம் கேட்பவர் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி சேர்த்து செலுத்த வேண்டும். வாகன ஏலம் மற்றும் உறுதிபடுத்தும் குழுவினரால் உறுதிசெய்யப்பட்ட பின்னரே பொருட்கள் ஏலதாரரரிடம் ஒப்படை க்கப்படும்.
- பார் ஊழியரை 2 வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
- புகாரின்பேரில் வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 30). இவர் இரட்டை வாய்க்கால் அருகே உள்ள மது பாரில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை வியாபாரம் நடக்கும். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரை திறப்பதற்காக பாரதி சென்றார்.
அப்போது அங்கு மருதுபாண்டி, முருகன் ஆகியோர் பொதுவெளியில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தனர். மேலும் பாரதியை பாரை திறக்க ஏன் தாமதமாக வருகிறாய் என கேட்டு தகராறு செய்தனர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர்.
நாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டி மற்றும் முருகனை கைது செய்தனர்.
- பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
- சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டுகிடந்த அணைகள், குளம், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணை யிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 400 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 800 கனஅடியாக உயர்த்த ப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 132 அடிவரை உயரும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகைஅணையின் நீர்மட்டம் 52.72 அடியாக உள்ளது. அணைக்கு 710 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
57 உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். எனினும் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 47 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழை யால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது. அணைக்கு 42 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வன த்துறையினர் அறிவித்தனர். இன்று 2-ம் நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவதால் தடை தொடரும் என தெரிவித்த னர்.
இதேபோல் வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு 2-ம் நாளாக தடை தொடரும் என வன த்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பெரியாறு 7.6, தேக்கடி 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதிஅணை 10.8, போடி 9.6, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 2.2, வீரபாண்டி 7.4, ஆண்டிபட்டி 45, அரண்மனைப்புதூர் 24 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டினர்.
- வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலங்களை கொண்டதாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை, போடி மெட்டு, குமுளி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மலை ஸ்தலங்களுக்கு வருகின்றனர். மேகமலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகள் இறைச்சி கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டினர்.
இந்த நிலையில் ஓடைப்பட்டி பிரிவு அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அனந்தப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர்.
வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பைக்கை சோதனை செய்த போது அதில் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பைக்கில் வந்த வருசநாடு காந்தி கிராமத்தைச் சேர்ந்த ஜெயம் (வயது 30), அஜித் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். துப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டைக்கு சென்றனரா? மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
கம்பத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் சிவபிரகாஷ் (வயது20). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டனர். தனது சகோதரர் சிவனேஸ்வரன் (29) என்பவருடன் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தேனி அருகே பாலார்பட்டியில் அவரது நண்பருடன் தங்கி இருந்தார்.பெற்றோர் உயிரிழந்ததால் தனக்கு ஆதரவு இல்ைல என மனமுடைந்த சிவபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடியை சேர்ந்தவர் இந்திராணி (75). கடந்த சில நாட்களாக நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மண்எண்ணையை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி (37). இவருக்கு திருமண மாகாததால் விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையா னார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள செல்வம் என்பவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சாரதா (40). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கோவில் திருவிழாவில் முன்விரோதத்தில் வாலிபரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
- வாலிபரின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனி ரைஸ் மில் தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகன் இருளப்பன் (வயது34). இவர் சென்டிரிங் வேலை பார்த்து வந்தார்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் இருளப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இருளப்பனுக்கும், சிந்துவம்பட்டியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அதனை மனதில் வைத்து திருவிழாவுக்கு வந்த இருளப்பனிடம் கார்த்திக்ராஜா, முத்துராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இருளப்பனை கடுமையாக தாக்கினர்.மேலும் கத்தியால் குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை தடுக்க வந்த செந்தில்குமார் என்பவரையும் அந்த கும்பல் தாக்கினர். இதனால் திருவிழாவிற்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ரத்த வெள்ளத்தில் இருந்த இருளப்பனை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருளப்பன் கொலை செய்யப்பட்டது தெரிய வரவே அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. சம்பவ இடத்துக்கு எஸ்.பி. பிரவீன்உமேஸ் டோங்கரே தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்ைத நடத்தி கொலையாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிந்துவம்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த காமாட்சி, கோபி, பாலகிருஷ்ணன், பிரவீன்குமார், சாந்தகுமார், பாலா மற்றும் சிலரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருளப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பதட்டத்தை தணிக்க அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- வீட்டைவிட்டு வெளியே சென்ற டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது43). நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்தார். சின்னமனூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் யுவன் (44). லாரி டிரைவர். சம்பவத்தன்று கேரளாவுக்கு லோடு ஏற்றி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. லாரி அலுவலகத்தில் விசரித்தபோது யுவன் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றது தெரிய வந்தது.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
- 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வருசநாடு:
மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இந்த முகாமுக்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு 54 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் வேளாண்மை துறை, மாநில வாழ்வாதார இயக்கம், சுகாதார துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மருத்துவ பெட்டகங்கள் என மொத்தம் 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
- தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
- கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றான தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
இதனைத் தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது.
அப்போது ஆக்கிரமிப்பாளர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வந்து தங்களது கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர செட், பெட்டிகள், போர்டுகள் போன்றவற்றை அகற்றி கொண்டனர். இருப்பினும் கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் சாலையின் அளவுகள் எவ்வளவு என்று வரைபடத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு சாலையின் அளவு குறைவாக இருக்கும் கட்டிடங்கள் முன்பு எத்தனை மீட்டர் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று அளவீடு செய்யப்பட்டு பெயிண்ட் மூலம் குறிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்பு அளவு குறித்து அறிவுத்தப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதிஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
அதுபோல ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






