search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைபெரியாறு அணையிலிருந்து மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு - சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 7 அடி உயர்வு
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    முல்லைபெரியாறு அணையிலிருந்து மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு - சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 7 அடி உயர்வு

    • பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
    • சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டுகிடந்த அணைகள், குளம், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் அணை யிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 400 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 800 கனஅடியாக உயர்த்த ப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 132 அடிவரை உயரும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகைஅணையின் நீர்மட்டம் 52.72 அடியாக உள்ளது. அணைக்கு 710 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    57 உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். எனினும் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 47 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழை யால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது. அணைக்கு 42 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வன த்துறையினர் அறிவித்தனர். இன்று 2-ம் நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவதால் தடை தொடரும் என தெரிவித்த னர்.

    இதேபோல் வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு 2-ம் நாளாக தடை தொடரும் என வன த்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பெரியாறு 7.6, தேக்கடி 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதிஅணை 10.8, போடி 9.6, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 2.2, வீரபாண்டி 7.4, ஆண்டிபட்டி 45, அரண்மனைப்புதூர் 24 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×