போடியில் பார் ஊழியரை தாக்கி மிரட்டிய 2 பேர் கைது

பார் ஊழியரை 2 வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.புகாரின்பேரில் வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 30). இவர் இரட்டை வாய்க்கால் அருகே உள்ள மது பாரில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை வியாபாரம் நடக்கும். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரை திறப்பதற்காக பாரதி சென்றார்.

அப்போது அங்கு மருதுபாண்டி, முருகன் ஆகியோர் பொதுவெளியில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தனர். மேலும் பாரதியை பாரை திறக்க ஏன் தாமதமாக வருகிறாய் என கேட்டு தகராறு செய்தனர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர்.

நாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டி மற்றும் முருகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com