என் மலர்
தேனி
- பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
- சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டுகிடந்த அணைகள், குளம், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணை யிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 400 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 800 கனஅடியாக உயர்த்த ப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 132 அடிவரை உயரும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகைஅணையின் நீர்மட்டம் 52.72 அடியாக உள்ளது. அணைக்கு 710 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
57 உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். எனினும் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 47 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழை யால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது. அணைக்கு 42 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வன த்துறையினர் அறிவித்தனர். இன்று 2-ம் நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவதால் தடை தொடரும் என தெரிவித்த னர்.
இதேபோல் வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு 2-ம் நாளாக தடை தொடரும் என வன த்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பெரியாறு 7.6, தேக்கடி 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதிஅணை 10.8, போடி 9.6, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 2.2, வீரபாண்டி 7.4, ஆண்டிபட்டி 45, அரண்மனைப்புதூர் 24 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டினர்.
- வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலங்களை கொண்டதாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை, போடி மெட்டு, குமுளி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மலை ஸ்தலங்களுக்கு வருகின்றனர். மேகமலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகள் இறைச்சி கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டினர்.
இந்த நிலையில் ஓடைப்பட்டி பிரிவு அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அனந்தப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர்.
வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பைக்கை சோதனை செய்த போது அதில் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பைக்கில் வந்த வருசநாடு காந்தி கிராமத்தைச் சேர்ந்த ஜெயம் (வயது 30), அஜித் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். துப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டைக்கு சென்றனரா? மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
கம்பத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் சிவபிரகாஷ் (வயது20). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டனர். தனது சகோதரர் சிவனேஸ்வரன் (29) என்பவருடன் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தேனி அருகே பாலார்பட்டியில் அவரது நண்பருடன் தங்கி இருந்தார்.பெற்றோர் உயிரிழந்ததால் தனக்கு ஆதரவு இல்ைல என மனமுடைந்த சிவபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடியை சேர்ந்தவர் இந்திராணி (75). கடந்த சில நாட்களாக நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மண்எண்ணையை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி (37). இவருக்கு திருமண மாகாததால் விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையா னார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள செல்வம் என்பவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சாரதா (40). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கோவில் திருவிழாவில் முன்விரோதத்தில் வாலிபரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
- வாலிபரின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனி ரைஸ் மில் தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகன் இருளப்பன் (வயது34). இவர் சென்டிரிங் வேலை பார்த்து வந்தார்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் இருளப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இருளப்பனுக்கும், சிந்துவம்பட்டியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அதனை மனதில் வைத்து திருவிழாவுக்கு வந்த இருளப்பனிடம் கார்த்திக்ராஜா, முத்துராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இருளப்பனை கடுமையாக தாக்கினர்.மேலும் கத்தியால் குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை தடுக்க வந்த செந்தில்குமார் என்பவரையும் அந்த கும்பல் தாக்கினர். இதனால் திருவிழாவிற்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ரத்த வெள்ளத்தில் இருந்த இருளப்பனை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருளப்பன் கொலை செய்யப்பட்டது தெரிய வரவே அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. சம்பவ இடத்துக்கு எஸ்.பி. பிரவீன்உமேஸ் டோங்கரே தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்ைத நடத்தி கொலையாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிந்துவம்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த காமாட்சி, கோபி, பாலகிருஷ்ணன், பிரவீன்குமார், சாந்தகுமார், பாலா மற்றும் சிலரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருளப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பதட்டத்தை தணிக்க அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- வீட்டைவிட்டு வெளியே சென்ற டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது43). நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்தார். சின்னமனூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் யுவன் (44). லாரி டிரைவர். சம்பவத்தன்று கேரளாவுக்கு லோடு ஏற்றி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. லாரி அலுவலகத்தில் விசரித்தபோது யுவன் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றது தெரிய வந்தது.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
- 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வருசநாடு:
மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இந்த முகாமுக்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு 54 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் வேளாண்மை துறை, மாநில வாழ்வாதார இயக்கம், சுகாதார துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மருத்துவ பெட்டகங்கள் என மொத்தம் 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
- தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
- கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றான தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
இதனைத் தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது.
அப்போது ஆக்கிரமிப்பாளர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வந்து தங்களது கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர செட், பெட்டிகள், போர்டுகள் போன்றவற்றை அகற்றி கொண்டனர். இருப்பினும் கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் சாலையின் அளவுகள் எவ்வளவு என்று வரைபடத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு சாலையின் அளவு குறைவாக இருக்கும் கட்டிடங்கள் முன்பு எத்தனை மீட்டர் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று அளவீடு செய்யப்பட்டு பெயிண்ட் மூலம் குறிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்பு அளவு குறித்து அறிவுத்தப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதிஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
அதுபோல ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் அலுவலர் டேவிட்ராஜா தெரிவித்துள்ளார். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும். அருவியில் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு குளிக்க சென்றனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதேபோல் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழைபெய்தது. இதனால் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியை எட்டியது. அணைக்கு 866 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 52.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 490 கன அடி நீர் வருகிறது.
மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டும் பட்சத்தில் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 93 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.43 அடியாக உள்ளது. 47 கன அடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர் 10.2, உத்தமபாளையம் 1.3, சண்முகாநதி அணை 47, போடி 14.2, வீரபாண்டி 7.2, மஞ்சளாறு 42, ேசாத்துப்பாறை 55, பெரியகுளம் 85, வீரபாண்டி 5.4, ஆண்டிபட்டி 12.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 80 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
- போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பம் உத்தமபுரம் பிரமலைக்கள்ளர் இளைஞர் அணி மகாசபை சார்பில் 36 இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 80 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியானது கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வரை சுமார் 8 கி.மீ தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது.
மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
- விவசாயி மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் மச்சேந்திரன் (வயது54).
சம்பவத்தன்று தனது தோட்டத்தில் வாழை இலை அறுக்க சென்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாநில அளவிலான சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு தற்காப்பு கலைகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது.
- போடி மாணவ-மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநில அளவிலான முதல் பரிசினை தட்டிச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு தற்காப்பு கலைகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது.
சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
சிலம்பாட்டம், சுருள்பட்டா, மான் கொம்பு,வேல் கம்பு, நெருப்புச் சங்கிலி போன்ற தமிழர்களின் பாரம்பரியமான பல்வேறு தற்காப்பு கலைகள் சார்ந்து நடைபெற்ற போட்டிகளில் மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் போடி விர்மன் சிலம்பாட்ட பயிற்சியகம் சார்பாக பங்கேற்ற மாணவ-மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநில அளவிலான முதல் பரிசினை தட்டிச் சென்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வெற்றி கோப்பையையும் வழங்கினார்.
மாநில அளவில் நடைபெற்ற இந்த தற்காப்பு கலைக ளுக்கான திறன் போட்டியில் முதலிடத்தை பெற்ற இருமல் சிலம்பாட்ட பயிற்சியக மாணவ-மாண விகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவி த்தனர்.
- கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
- ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் திறந்து விடப்படும் நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அதன் மூலம் 9 கண்மாய்களுக்கு நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து சிலர் தென்னை மரம், இலவமரம் மற்றும் எலுமிச்சை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வந்தனர்.
இதனால் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த மாதம் நீதிமன்றம் நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றி நீர்நிலைப் பகுதிகளை மீட்டெடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில் பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்தரம், மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஜே.சி.பி. மூலம் நீர் நிலை பகுதியில் ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. வாகனத்தின் முன் அமர்ந்து உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு அதிகாரிகளை அனுமதிக்கவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்புடன் நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து மரங்களையும் வேருடன் எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதே போல் மஞ்சளாறு அணை நீர் தேக்கப் பகுதியில் அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.






