என் மலர்
தேனி
- ரோந்துப்பணியின் போது ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
- ரேசன்அரிசி கடத்திய வாலிபரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி அதனை சுத்தம் செய்து கேரளாவுக்கு விற்பனை செய்து வருவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து போலீசாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.
இன்று ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அவர் 900 கிலோ ரேசன் அரிசி மூடைகளை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை பாலீஸ் செய்து கேரளாவுக்கு விற்று வந்துள்ளார். பிடிபட்டவர் சின்னமனூரை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், இவர் தொடர்ந்து இதேபோல ரேசன் அரிசி விற்று வருபவர் எனவும் உறுதியானது.
இதனையடுத்து பறிமுதல் செய்த அரிசியை உத்தம பாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
முத்துக்குமாரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது.
- டி.சி.எஸ் அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தேனி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த வர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த மாணாக்கர்களுக்கு டி.சி.எஸ் அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இள ங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணா க்கர்கள் விண்ணப்பி க்கலாம்.
மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தே ர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் பைன் எனப்படும் செவி லியர் பயிற்சியினை பெறு வார்கள். இப்பயிற்சியானது 2 முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும், பயிற்சி கால ங்களில் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இப்பயிற்சி யினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவ மனைகளில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை தாட்கோவின் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி க்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
- மலைச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
- மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மல்லபுரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே தாழையூத்து வழியாக மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைச்சாலை அமைந்து ள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுடைய மலைச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் நேரங்களில் நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. அதனால் சில இடங்களில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு காணப்படுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. அடுத்து மழைக்காலம் தொடங்க உள்ளதால் சாலை மேலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக தாழையூத்து பகுதி விவசாயிகள் கூறுகையில், மலைசாலை அமைக்கப்பட்ட போது தாழையூத்து-மல்லபுரம் இடையே அரசு மினி பஸ் சேவை தொடங்க ப்பட்டது. இது இரண்டு மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. அதன் பின்னர் போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை சேதமடைய தொடங்கியது. மேலும் மரம், செடிகள் ஆக்கிரமிப்பால் சாலையின் அளவு குறுகிய தால் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை போக்கு வரத்திற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது சாலை மிகவும் சேதமடைந்த காரணத்தால் பெரிய வாகனங்களும் இயக்க முடியவில்லை. தற்போது பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சாலை வழியாக இயக்க ப்பட்டு வருகிறது.
இதனால் விவசாய விளைபொரு ட்களை அதிக தொலைவு உடைய க.விலக்கு, ஆண்டிபட்டி வழியாக மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயண செலவும் நேர விரையமும் ஏற்படுகிறது. இரண்டு மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மல்லபுரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் ஆபத்தான வளைவுகளில் புதிய தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் மாணவிகளிடம் தகாத முறையில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.
- புகாரின்பேரில் 3 ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அருள்பிரகாசம். இவர் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அருள்பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியது உறுதியானது.
மேலும் அதேபள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் செல்வக்குமார், தாவரவியல் ஆசிரியர் வெற்றி ஆகியோர் மாணவிகளை போராட்டம் நடத்த தூண்டியதும் தெரியவந்தது. இதனை யடுத்து ஆசிரியர்கள் அருள்பிரகாசம், செல்வக்குமார், வெற்றி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி உத்தரவிட்டுள்ளார்.
- முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
- 71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணை க்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. வரத்து 1180 கனஅடி, திறப்பு 1300 கனஅடி, இருப்பு 3172 மி.கனஅடி.
71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது. வரத்து 1442 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2849 மி.கனஅடி.
57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 112 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கனஅடியாக உள்ளது.
126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து முழுகொள்ள ளவை எட்டி வருகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 117.75 அடியாக உள்ளது. வரத்து 66 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 86.12 மி.கனஅடியாக உள்ளது.
கொடைக்கானல் மற்றும் மலைகிராமங்களில் பெய்துவரும் ெதாடர்மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு 6.4, தேக்கடி 39, கூடலூர் 4.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.4, வைகை அணை 7, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 6, பெரியகுளம் 3, அரண்மனைப்புதூர் 14.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகியதால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது.
- எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சோலையூர் மலை கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து ள்ள இப்பகுதியில் தற்போது நீல நிற கத்திரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.
சுமார் 60 நாள் பயிரான கத்தரிக்காய் தற்போது அறுவடை செய்யப்படும் நேரத்தில் புழுத்தாக்குதல் நோய் பாதிப்பு ஏற்பட்டு ள்ளது. புழுத்தாக்குதல் நோயை கட்டுப்படுத்து வதற்காக மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் இப்பகுதியில் பருவம் தவறி பெய்த சாரல் மழை காரணமாக மருந்தடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. தெளிக்கப்படும் மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகிப் போனது. இதனால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது. எனவே விளைந்த கத்தரிக்காயை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் செடியிலிருந்து பறிக்கப்பட்ட கத்தரிக்காய் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது . இப்பகுதி முழுவதும் அழுகிய கத்தரிக்காய் சாலை முழுவதும் கொட்டப்பட்டு அழுகி மட்கி வீணாகிப் போனது. தற்போது கத்தரி க்காய் கொள்முதல் விலை கிலோ ரூ.28ல் இருந்து ரூ.30 வரை வாங்கப்படும் நிலையில் புழுத்தாக்குதல் மற்றும் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கத்தரி க்காயை கொள்முதல் செய்ய வியாபாரிகள் மறுத்து விட்டனர்.
இதனால் விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளனர். குப்பையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய் ஆடு, மாடுகளுக்கு இரையாகி வருகிறது. எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
- ரிஷியோகா அறக்கட்டளை மற்றும் தேனிமாவட்ட யோகாசன சங்கம் சார்பில் தென்மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.
- இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கடினமான ஆசனங்களை நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் செய்து காட்டினர்.
கம்பம்:
கம்பத்தில் ரிஷியோகா அறக்கட்டளை மற்றும் தேனிமாவட்ட யோகாசன சங்கம் சார்பில் தென்மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.ரிஷியோகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் துரை.ராஜேந்திரன் வரவேற்றார். உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமை தாங்கினார்.
கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி இணை செயலாளர் சுகன்யா காந்தவாசன், ேயாகா பயிற்சியாளர் ரவிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட யோகாசன சங்க பொருளாளர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். யோகா போட்டிகள் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 12 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கடினமான ஆசனங்களை நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் செய்து காட்டினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரர்களுக்கு தனி நபர் பரிசுகளும், குழு பரிசுகள் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் யோகாசனப் போட்டியில் கம்பம் புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் மன வளர்ச்சி குன்றிய மாணவி மதுமதி கூர்மா ஆசனம், சமகோண ஆசனம், ஹனுமன் ஆசனம் செய்தார். அப்போது தனது முதுகில் 70 கிலோ எடை கொண்ட தனது பயிற்சியாளரை நிற்க வைத்து சாதனை படைத்தார்.உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பார்வையாளர்கள் சாதனை மாணவியை பாராட்டி பரிசு வழங்கினர்.
- உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர்
- அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.
அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். உத்தமபாளையத்தை சேர்ந்த முகமது மைதீன் (வயது40), வல்லரசு (23), மணிகண்டன் (21), ஊத்துப்பட்டியை சேர்ந்த மதிவாணன் (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதே பகுதியில் சூதாடிய மற்றொரு கும்பலை சேர்ந்த சூர்யா (21), ஈஸ்வரன் (32), கார்த்திக் (30), மாரிமுத்து (34) ஆகியோரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
- கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்
- தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய.லோகநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, சோலைராஜன், தேனி நகர தலைவர் செல்வ பாண்டி யன், நகர பொருளாளர் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறு ப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
- மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
- முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
தேனி:
தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் ஆற்றுப்பாலம் அருகே செயல்பட்டு வரும் எம்.எம். மல்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரி மற்றும் எம்.எம். பல் ஆஸ்பத்திரி சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
பல் எடுத்தல், பல் கட்டுதல், பல் பாதுகாப்பு, பல் தொடர்பான இதர பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் பல் முக சீரமைப்பு டாக்டர் பாஸ்கரன், பொது பல் மருத்துவர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
- நேற்று இரவு ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
- இதனால் இன்றுகாலை அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தில் ஏறி தண்டவாளத்தை கடந்து சென்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் இருந்து மறவபட்டி, போடி தாச ன்பட்டி, மணி யாரம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் அடியில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.
கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரும் விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று இரவு ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இத னால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சென்றது.
மேலும் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. நடந்து செல்ப வர்கள் சுரங்கப்பாதையை கடக்க முடியவில்லை.
இதனால் இன்றுகாலை அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தில் ஏறி தண்டவாளத்தை கடந்து சென்றனர். இந்த மண்சாலை மழையால் வழுக்கிச் சென்றதால் தவறி விழும் நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் இதே நிலைமை தொடர்வதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே ரெயில்வே சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
தேவாரம் அப்பாவுபிள்ளை நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் ராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது போடியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






