என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாழையூத்து - மல்லப்புரம்"

    • மலைச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
    • மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மல்லபுரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே தாழையூத்து வழியாக மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைச்சாலை அமைந்து ள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுடைய மலைச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.

    மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் நேரங்களில் நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. அதனால் சில இடங்களில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு காணப்படுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. அடுத்து மழைக்காலம் தொடங்க உள்ளதால் சாலை மேலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக தாழையூத்து பகுதி விவசாயிகள் கூறுகையில், மலைசாலை அமைக்கப்பட்ட போது தாழையூத்து-மல்லபுரம் இடையே அரசு மினி பஸ் சேவை தொடங்க ப்பட்டது. இது இரண்டு மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. அதன் பின்னர் போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை சேதமடைய தொடங்கியது. மேலும் மரம், செடிகள் ஆக்கிரமிப்பால் சாலையின் அளவு குறுகிய தால் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டது.

    இருப்பினும் பொதுமக்கள் வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை போக்கு வரத்திற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது சாலை மிகவும் சேதமடைந்த காரணத்தால் பெரிய வாகனங்களும் இயக்க முடியவில்லை. தற்போது பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சாலை வழியாக இயக்க ப்பட்டு வருகிறது.

    இதனால் விவசாய விளைபொரு ட்களை அதிக தொலைவு உடைய க.விலக்கு, ஆண்டிபட்டி வழியாக மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயண செலவும் நேர விரையமும் ஏற்படுகிறது. இரண்டு மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மல்லபுரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் ஆபத்தான வளைவுகளில் புதிய தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×