என் மலர்tooltip icon

    தேனி

    • முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணை க்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. வரத்து 1180 கனஅடி, திறப்பு 1300 கனஅடி, இருப்பு 3172 மி.கனஅடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது. வரத்து 1442 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2849 மி.கனஅடி.

    57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 112 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கனஅடியாக உள்ளது.

    126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து முழுகொள்ள ளவை எட்டி வருகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 117.75 அடியாக உள்ளது. வரத்து 66 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 86.12 மி.கனஅடியாக உள்ளது.

    கொடைக்கானல் மற்றும் மலைகிராமங்களில் பெய்துவரும் ெதாடர்மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 6.4, தேக்கடி 39, கூடலூர் 4.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.4, வைகை அணை 7, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 6, பெரியகுளம் 3, அரண்மனைப்புதூர் 14.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகியதால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது.
    • எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சோலையூர் மலை கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து ள்ள இப்பகுதியில் தற்போது நீல நிற கத்திரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.

    சுமார் 60 நாள் பயிரான கத்தரிக்காய் தற்போது அறுவடை செய்யப்படும் நேரத்தில் புழுத்தாக்குதல் நோய் பாதிப்பு ஏற்பட்டு ள்ளது. புழுத்தாக்குதல் நோயை கட்டுப்படுத்து வதற்காக மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் இப்பகுதியில் பருவம் தவறி பெய்த சாரல் மழை காரணமாக மருந்தடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. தெளிக்கப்படும் மருந்துகள் மழை நீரில் கரைந்து வீணாகிப் போனது. இதனால் புழுத்தாக்கு தலுடன் அதிக ஈரப்பதம் காரணமாக கத்தரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்து கொண்டது. எனவே விளைந்த கத்தரிக்காயை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

    இதனால் செடியிலிருந்து பறிக்கப்பட்ட கத்தரிக்காய் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது . இப்பகுதி முழுவதும் அழுகிய கத்தரிக்காய் சாலை முழுவதும் கொட்டப்பட்டு அழுகி மட்கி வீணாகிப் போனது. தற்போது கத்தரி க்காய் கொள்முதல் விலை கிலோ ரூ.28ல் இருந்து ரூ.30 வரை வாங்கப்படும் நிலையில் புழுத்தாக்குதல் மற்றும் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கத்தரி க்காயை கொள்முதல் செய்ய வியாபாரிகள் மறுத்து விட்டனர்.

    இதனால் விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளனர். குப்பையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய் ஆடு, மாடுகளுக்கு இரையாகி வருகிறது. எனவே பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரிஷியோகா அறக்கட்டளை மற்றும் தேனிமாவட்ட யோகாசன சங்கம் சார்பில் தென்மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கடினமான ஆசனங்களை நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் செய்து காட்டினர்.

    கம்பம்:

    கம்பத்தில் ரிஷியோகா அறக்கட்டளை மற்றும் தேனிமாவட்ட யோகாசன சங்கம் சார்பில் தென்மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.ரிஷியோகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் துரை.ராஜேந்திரன் வரவேற்றார். உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமை தாங்கினார்.

    கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி இணை செயலாளர் சுகன்யா காந்தவாசன், ேயாகா பயிற்சியாளர் ரவிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட யோகாசன சங்க பொருளாளர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். யோகா போட்டிகள் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 12 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கடினமான ஆசனங்களை நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் செய்து காட்டினர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரர்களுக்கு தனி நபர் பரிசுகளும், குழு பரிசுகள் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் யோகாசனப் போட்டியில் கம்பம் புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் மன வளர்ச்சி குன்றிய மாணவி மதுமதி கூர்மா ஆசனம், சமகோண ஆசனம், ஹனுமன் ஆசனம் செய்தார். அப்போது தனது முதுகில் 70 கிலோ எடை கொண்ட தனது பயிற்சியாளரை நிற்க வைத்து சாதனை படைத்தார்.உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பார்வையாளர்கள் சாதனை மாணவியை பாராட்டி பரிசு வழங்கினர்.

    • உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர்
    • அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.

    அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். உத்தமபாளையத்தை சேர்ந்த முகமது மைதீன் (வயது40), வல்லரசு (23), மணிகண்டன் (21), ஊத்துப்பட்டியை சேர்ந்த மதிவாணன் (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் சூதாடிய மற்றொரு கும்பலை சேர்ந்த சூர்யா (21), ஈஸ்வரன் (32), கார்த்திக் (30), மாரிமுத்து (34) ஆகியோரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்
    • தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
    தேனி:

    தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய.லோகநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, சோலைராஜன், தேனி நகர தலைவர் செல்வ பாண்டி யன், நகர பொருளாளர் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறு ப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    • மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
    • முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் ஆற்றுப்பாலம் அருகே செயல்பட்டு வரும் எம்.எம். மல்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரி மற்றும் எம்.எம். பல் ஆஸ்பத்திரி சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.

    பல் எடுத்தல், பல் கட்டுதல், பல் பாதுகாப்பு, பல் தொடர்பான இதர பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் பல் முக சீரமைப்பு டாக்டர் பாஸ்கரன், பொது பல் மருத்துவர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    • நேற்று இரவு ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • இதனால் இன்றுகாலை அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தில் ஏறி தண்டவாளத்தை கடந்து சென்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் இருந்து மறவபட்டி, போடி தாச ன்பட்டி, மணி யாரம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் அடியில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

    கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரும் விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று இரவு ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இத னால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சென்றது.

    மேலும் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. நடந்து செல்ப வர்கள் சுரங்கப்பாதையை கடக்க முடியவில்லை.

    இதனால் இன்றுகாலை அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தில் ஏறி தண்டவாளத்தை கடந்து சென்றனர். இந்த மண்சாலை மழையால் வழுக்கிச் சென்றதால் தவறி விழும் நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் இதே நிலைமை தொடர்வதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே ரெயில்வே சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் அப்பாவுபிள்ளை நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் ராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவாரத்தில் இருந்து போடி மெயின் ரோட்டில் அழகர்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது போடியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள காமராஜர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பவளம் நாகராஜ் (வயது 84). இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோம்பை ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் பாபுத்தாய் (56). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மூட்டு வலி காரணமாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

    இருந்தபோதும் நோய் குணமாகவில்லை. இதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது.
    • லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 122.80 அடியாக உள்ளது.

    நேற்று 1000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1401 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3182 மி.கன அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் அணையின் நீர் மட்டம் 123 அடியை எட்ட உள்ளது. இம்மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விடும். இதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 55.09 அடியாக உள்ளது. வரத்து 2042 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2733 மி.கன அடி.

    57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.95 அடியை எட்டியதால் அணையில் இருந்து நேற்று முதல் தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது.

    126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து 93 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 80.69 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 17.4, தேக்கடி 2.4, உத்தமபாளையம் 0.8, சண்முகாநதி அணை 1, போடி 15.4, வைகை அணை 64, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 95, பெரியகுளம் 90, வீரபாண்டி 4.8, அரண்மனைப்புதூர் 13.8, ஆண்டிபட்டி 31.6, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • போடி மெட்டு மலைச் சாலையின் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 600 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் மலைச்சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
    • மேலும் போடி மெட்டு மலைச்சாலையில் தடுப்புச் சுவர் தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி கிடப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு முக்கிய மலைச்சாலையாகும்.

    சுமார் 17 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ள இந்த போடி ெமட்டு மலைச் சாலையின் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 600 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் மலைச்சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

    தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறி வாகனங்கள், பால்வண்டி, வாகனங்கள் மற்றும் தினசரி போக்குவரத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூப்பாறை, கஜானா பாறை, பி.எல்.ராவ், தோண்றி மலை போன்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கும், ஏலக்காய் தோட்டங்களுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகளும் பயணம் செய்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களும் சென்று வருகின்றது.

    இப்பகுதியில் முக்கிய வர்த்தக பயிரான ஏலக்காய் மூடைகள் கொண்டுவரும் வாகனங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் இப்பகுதியில் மிகப்பெரும் அளவில் பாறைகள் சரிந்து விழுந்து விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பல நாட்கள் போராடி அந்த பாறைகள் அகற்றப்பட்டன.

    ஆனால் சுமார் 600 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவர் மீண்டும் கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டதால் வாகனங்கள் மிகுந்த ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    4-வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் வாகனங்கள் கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பயணித்து வருகின்றன.

    மேலும் போடி மெட்டு மலைச்சாலையில் தடுப்புச் சுவர் தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி கிடப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருப்பதால் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள இந்த போடி மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைத்து உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது. மின் வயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.
    • இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்தான்

    வருசநாடு:

    வருசநாடு அருகே அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சகில்ராஜா மகன் லோகிதன் (வயது7). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பரமன் என்பவர் வீட்டில் மின் வயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.

    அந்த வயரை எதிர்பாராத விதமாக லோகிதன் பிடித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்தான். அக்கம் பக்கத்தினர் வருசநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே லோகிதன் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×