என் மலர்tooltip icon

    தேனி

    • சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற இளம்பெண் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி ரோகினி(24).

    இவர்களுக்கு தரணிஸ்(6), கிரிசினியா(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற ரோகினி மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகினியின் தாய் பஞ்சவர்ணம் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு, ஒக்கரைப்பட்டி, மொட்டனூத்து மற்றும் பிச்சம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட மரிக்குண்டு ஊராட்சி ப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட மும் முடிவுற்ற பணியினை யும், வீருசின்னம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டுமான பணியினையும், மொட்ட னூத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்தி ட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை முடிவுற்ற பணியினையும்,

    ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குளம் புனர மைத்தல் பணியினையும், நீரார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மாணவியர்கள் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும்,

    கொப்பையம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினையும், பிச்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வரத்துக் கால்வாய் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் எம்.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பாள்ளி யில் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். வளர்ச்சித்திட்ட ப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தி னார்.

    • தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது.
    • 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 55 அடியை எட்டியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது. வரத்து 1884 கனஅடி, திறப்பு 1300 கனஅடி, இருப்பு 3361 மி.கனஅடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் 57.48 அடியாக உள்ளது. வரத்து 1756 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3138 மி.கனஅடி.

    57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 55 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 100 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கனஅடியாக உள்ளது.

    126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடியாக உள்ளது. நீர்வரத்து 44 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 94.34 மி.கனஅடி. அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டு மானாலும் முழுகொள்ள ளவை நெருங்கும் என்பதால் வராக நதிக்கரையோரம் உள்ள மக்களுக்கு பொது ப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
    • எனது கணவர் பெயரில் இடுக்கி மாவட்டத்தில் இருந்த ஏலத்தோட்டத்தையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான முத்து மனோகரன் மனைவி ஜான்சிராணி. தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் முத்துமனோகரன் போடி நகர்மன்ற தலைவராக இருந்தவர். தி.மு.க.வில் விவசாய அணிமாநில இணைச்செயலாளராகவும் இருந்தார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். எனது கணவரின் சகோதரர் முத்தையா இறந்தபின் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுகுடும்பமாக வசித்து வந்தோம்.

    தனது சொத்துக்களை எனது கணவர் அனைவருக்கும் பிரித்து கொடுத்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு எனது மகனுக்கு தொழில் செய்து கொடுக்க வேண்டும் என்று கணவரின் அண்ணன் மகன் சேது மற்றும் மகள் ரதிதேவி ஆகியோர் ரூ.3 கோடியை கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் எனது கணவர் இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறி போடிக்கு அவரது உடலை கொண்டு வந்தனர்.

    எனது கணவர் கொடுத்து வைத்த ரூ.3 கோடியை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. எனது கணவர் பெயரில் இடுக்கி மாவட்டத்தில் இருந்த ஏலத்தோட்டத்தையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர். எனது கணவரை சொத்துக்காகவும், பணத்திற்காகவும் விஷம் வைத்து கொலை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே இந்த இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த சில நாட்களாகவே போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
    • நேற்றிரவு இடி-மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி புதூர் போயன்துரை சாலையில் உள்ள ரெயில்வே தண்டவாள லைன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(45). இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ரெயில்வே லைன் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் இலவம்பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்றிரவு இடி-மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் செந்தில்குமாரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவரது குடும்பத்தினர் பக்கத்து அறையில் டி.வி பார்த்து கொண்டிருந்ததால் உயிர்தப்பினர். வீட்டு சுவர் இடிந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாதுகாப்புக்காக உறவினர் வீட்டுக்கு இடம்பெயர்ந்தனர்.

    • க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் பைக் மீது மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் சிவாஜி(62). தற்போது சுருளிபட்டியில் வசித்து வந்தார். இவர் தனது சகோதரர்உடன் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சுருளிபட்டி- சுருளிதீர்த்தம் சாலையில் உள்ள க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் அதிவேகமாக வந்து பைக் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த சிவாஜியை அக்கம்பக்கத்தி னர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே சிவாஜி இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்ட ர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ராயப்ப ன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பொதுப்பணி நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தது.
    • தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி நகரில் பிரதான கால்வாயாக உள்ள ராஜ வாய்க்கால் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பிரிந்து தேனி பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் வரை செல்கிறது.

    பொதுப்பணி நீர்வள த்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிர மிப்புகளால் ராஜவாய்க்கால் அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போய் சாக்கடை போல் மாறி விட்டது. அதன்காரணமாக கால்வாயில் நீர் செல்வது அரிதாகி விட்டது. மேலும் சாக்கடை போல் மாறிய கால்வாய் பகுதியில் ஆக்கிர மிப்பு மற்றும் கழிவுகள் அடைக்கப்பட்டிருப்பதால் மழை பெய்யும் நாட்களில் தேனி நகரில் வழிந்தோடும் நீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ராஜ வாய்க்கால் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நட வடிக்கை எதுவும் எடுக்க வில்லை.

    இந்நிலையில் தேனியை சேர்ந்த தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தேனியில் உள்ள பிரதான ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடக்கப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, பொதுப்பணி நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தேனி கொட்டக்குடி ஆற்றில் இருந்து தாமரைக் குளம் கண்மாய் பகுதி வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு வருகின்றன.

    இவற்றில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் கட்டிடங்களுக்கு பின்புறமே எடுக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசவோ, பரபரப்போ ஏற்படுத்த வில்லை. ஆனால் ராஜவாய்க்கால் பகுதி தேனி பழைய பஸ் நிலையத்தின் வழியாக அடியில் செல்வ தால் பழைய பஸ் நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள், மாடியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட், தரை வாடகை கடைகள் போன்றவை அகற்றப்பட்டது. அதனால் தேனி பழைய பஸ் நிலை யத்தின் வழியாக பஸ்கள் வந்து செல்ல அனுமதிக்க ப்படாமல் தற்காலிகமாக பஸ்நிலையம் மூடப்பட்டது.

    இதனால் தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் பஸ்கள் சாலை பகுதியிலே பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இதற்கிடையே பழைய பஸ் நிலையத்திற்கு வெளியே தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் தூர் வாரும் பணியும் நடந்தது. இதன்கார ணமாக பொதுமக்கள் மத்தியில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து காட்டு தீ போல் பரவி பரபரப்பை ஏற்படு த்தியது.

    தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டதை பொதுமக்கள் ஆர்வத்துட னும், ஆச்சரியத்துடன் பார்த்து, பரபரப்பாக பேசிவிட்டு சென்றனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தேனி-மதுரை சாலையில் ராஜவாய்க்கால் செல்லும் தாமரைக்குளம் வரை பாரபட்சமின்றி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேனியில் வெவ்வேறு பிரச்சினைகளில் மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கடமலை க்குண்டு தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் அனுசியா(17). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கா ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளி யேறிசென்றவர் வீடு திரும்பவில்லை.அக்கம்ப க்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்தவர் குமணன் மனைவி பிரியா(23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரண மாக இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துகொண்டு சென்ற பிரியா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் மகன் முத்துச்செல்வம்(16). இவர் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள பள்ளிவிடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற அவர் அதன்பிறகு கல்லூரிக்கு வரவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் விடுதி கண்காணிப்பாளர் எபினேசர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20ந் தேதி காலை 11.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

    எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம். இந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக தெரிவிக்கப்படும்.

    எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • ஜோதிடரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட முயன்றனர்.
    • போலீசார் ஒருவரை பிடித்தனர். தப்பிஓடிய நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ள குண்டல்நாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரவிமுத்து(51). இவர் ஜோதிடராக உள்ளார். மேலும் சொந்தமாக விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று தனது ேதாட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அமர்ந்திருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவரது தோட்டத்திற்கு வந்தனர். திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரவிமுத்து அணிந்திருந்த 25 பவுன் தங்க சங்கிலியை பறித்து க்கொண்டு ஓட முயன்றனர்.

    இதனைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரவிமுத்து கூச்சலிட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். மற்ற 2 பேரும் தப்பித்துவிடவே ஒருவரை மட்டும் பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை பிடித்து தப்பிஓடிய நபர்கள் யார் என விசாரித்து வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்லும் மாணவர்களை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்.
    • ஆண்டிபட்டி அருங்காட்சியகம், வைகை அணை மற்றும் வைகை அணை பூங்காவை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்லும் மாணவர்களை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்.

    கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் சுற்றுலா குறித்து கலாச்சார அரசியல் மற்றும் பொருளா தார தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி,

    ஆண்டிபட்டி, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடு திகளில் தங்கி பயிலும் 90 பள்ளி மாணவ, மாணவிகள், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 90 பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என மொத்தம் 200 பேர் 3 பஸ்களில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்வதற்கான பயணத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    ஆண்டிபட்டி அருங்கா ட்சியகம், வைகை அணை மற்றும் வைகை அணை பூங்காவை பார்வையிட்டு புதிய பஸ் நிலையத்தில் நிறைவடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    • மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • 7-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாய பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர்மழை யால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 2893 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.45 அடியாக உள்ளது. மழை கைகொடுக்கும்ப ட்சத்தில் 136 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள தாலும், முல்லைபெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படு வதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1760 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 56.66 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 120.70 அடியாக உள்ளது. 45 கனஅடிநீர் வருகிறது. 10 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 32.2, தேக்கடி 45, கூடலூர் 5.2, உத்தம பாளையம் 5.6, சண்முகா நதிஅணை 6.8, போடி 17.6, வீரபாண்டி 39, சோத்து ப்பாறை 8, மஞ்சளாறு அணை 24, பெரியகுளம் 15, வைகை அணை 24, அரண்மனைப்புதூர் 26, ஆண்டிபட்டி 10 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று 7-வது நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவ தால் தடை தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    ×